சிங்க‌ப்பூர்

TABLET MACHINE
Friday, February 3rd, 2012

மாத்திரைகளைப் பொட்டலமாகக் கட்டி கொடுக்கும் தானியங்கி இயந்திரத்திலிருந்து மாத்திரைகளைப் பெறுகிறார் தலைமைத் தாதி இந்திரா காந்தி. இதன் மூலம் மாத்திரைகளை வழங்குவதில் மனிதர்களால் நிகழும் தவறுகளைத் தவிர்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இயந்திரத்திலிருந்து வெளிவரும் மாத்திரைகளின் பொட்டலங்களில் நோயாளிகளுக்கு எவ்வளவு மாத்திரைகள் கொடுக்கவேண்டும் என்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த தானியங்கி இயந்திரத்தைத் தயாரித்த ‘ஒம்னி ஹெல்த் டெக்னாலஜிஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் சன்லவ் இல்லத்தில் பணிபுரியும் தாதியருக்கு இந்த இயந்திரத்தைப் பயன்படுத்த பயிற்சி அளிக்கின்றனர். 

படம்: ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்

tm logo
Friday, February 3rd, 2012
ஆபத்தான ஆயுதம் கொண்டு ஒருவரைத்  தாக்கியதாக
ஆடவர் ஒருவர் மீது சென்ற மாதம் 31ம் தேதி குற்றம் சாட்டப்பட்டது.
உடைந்த போத்தல் ஒன்றைக் கொண்டு முகம்மது கமால் ஜபார் என்பவரின் வயிற்றில் குத்தியதாக 36 வயது சிம் வை ன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் டாங்ளிங் கடைத்தொகுதியில் இருக்கும் சின் ராக் தாய் என்கிற டிஸ்கோ நிலையத்துக்கு வெளியில் அதிகாலை 5.30 மணி அளவில் நிகழ்ந்ததாகத் 
தெரிவிக்கப்பட்டது.
தாக்குதல் நடத்தப்பட்டபோது சிம்முடன் அவரது நான்கு ஆண் நண்பர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது சட்டவிரோதமாகக் கூடிய கூட்டம் என்று நீதிமன்ற ஆவணம் வர்ணித்துள்ளது.
ஆபத்துமிக்க ஆயுதம்
கொண்டு தாக்கிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிம்முக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம். தாக்குதல் நடந்தபோது சிம்முடன் இருந்த அவரது நான்கு நண்பர்களுக்கும் இந்தத் தண்டனை கிடைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
முழு விவரம் 3.2.2012 தமிழ் முரசில்
james khoo
Friday, February 3rd, 2012

முன்னாள் விற்பனை அதிகாரி ஒருவர் தமது முதலாளியின் அனுமதியின்றி கார் காட்சிக் கூடத்தில் இருந்த ‘லம்போர்கினி’ காரை வெளியே ஓட்டிச் சென்றார்.
தமது வாடிக்கையாளர் ஒருவருக்கு அந்த உயர்ரகக் காரைக் காண்பிக்கவே அவர் அப்படி செய்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தக் காரியத்தை 53 வயது ஜேம்ஸ் கூ கே செங் வேலை நேரத்துக்குப் பின் செய்தார் என்று கூறப்படுகிறது.
அந்த ‘லம்போர்கினி’ காரை ஓட்டிச் சென்ற ஜேம்ஸ் விபத்து ஒன்றில் சிக்கினார். அவர் ஓட்டிய கார் டாக்சி ஒன்றுடன் மோதியது. இதனைத் தொடர்ந்து கூ காரை நிறுத்தாமல் அவ்விடத்தை விட்டு விரைந்தார். இந்த விபத்து சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி அன்று குலிமார்ட் ரோட்டில் நிகழ்ந்தது.
முழு விவரம் 3.2.2012 தமிழ் முரசில்

 

food
Friday, February 3rd, 2012

உணவுகளைத் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் இனி, மேலும் ஒரு கடமையை நிறைவேற்றவேண்டும்.
பொட்டலம் அடைக்கப்பட்ட உணவுகளுக்கும் ‘புஃபே’ உணவு வகைகளுக்கும் அவை காலாவதியாகும் கால நேரத்தைத் தெரிவிக்கவேண்டும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் அறிவித்துள்ளது. இந்தப் புதிய விதிமுறை வரும் பிப்ரவரி மாதம் 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
பயனீட்டாளர்கள் காலாவதி யான உணவைச் சாப்பிடாமல்
இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
 புதிய நடப்பின் கீழ், சமைத்த உணவுகளை எத்தனை மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிடவேண்டும் என்ற விவரங்கள் முத்திரையிடப்படும்.
சில சமைத்த உணவு வகைகளை நான்கு மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிட வேண்டும். அப்படி இல்லாவிடில் உணவு கெட்டுவிடும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தக் காலாவதி காலநேரம் குறிப்பிடும் முறையால் பாதுகாப்பான, மாசற்ற உணவை உட்கொள்ளும் சாத்தியம் வலுவடைகிறது என்றார் தேசிய சுற்றப்புற வாரியத்தின் இயக்குநர் திரு. டான் ஜி சூங்.
முழு விவரம் 3.2.2012 தமிழ் முரசில்

 

tm logo
Friday, February 3rd, 2012

இம்மாதம் 7ஆம் தேதியன்று இடம் பெறும் தைப்பூசத் திருவிழாவில் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன் களைச் செலுத்த சிராங்கூன் ரோட்டில் உள்ள பெருமாள் கோயிலிலிருந்து தேங் ரோட்டிலுள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலுக்குப் பாதயாத்திரை யாகச் செல்வார்கள்.
7ஆம் தேதி பின்னிரவு 12.05 மணிக்கு முதலாம் தொகுதி பால்குடங்கள் பெருமாள் கோயிலை விட்டு புறப்படும். அலகு காவடிகள் பின்னிரவு
2.00 மணி முதல் புறப்படும்.

முழு விவரம் 3.2.2012 தமிழ் முரசில்

tm logo
Friday, February 3rd, 2012

புதிதாக ஆறு சுற்றுக்காவல் படகுகள் அறிமுகம் கண்டுள்ளதால் சிங்கப்பூர் துறைமுகங்களின் பாதுகாப்பு அம்சங்கள் கூடுதல் வலுவடைந்துள்ளன.
கடல்துறை துறைமுக ஆணையத்தால் இயக்கப்படும் இவ்வகை சுற்றுக்காவல் படகுகள், எண்ணெய்க் கசிவுகள் நேரிடும் சமயங்களில் அதனை திறம்பட சமாளிக்கும் உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டு       வடிவமைக் கப்பட்டுள்ளது இதன் கூடுதல் சிறப்பு.
ஆணையத்தின் முன்னைய படகுகளுக்கு மாற்றாக வந்துள்ள இப்புதிய வகை படகுகளில் எண்ணெய்க் கசிவு போன்ற இடர்கள் நேரிடும் சமயத்தில் எண்ணெய்களின் வீரியத்தை குறைக்க உதவும் 400 லிட்டர் எண்ணெய் முறிப்பு திரவமும் ஏற்றப்பட்டிருக்கும்.
மேற்கூறிய சிறப்பம்சங்கள் தவிர்த்து  இந்தச் சுற்றுக்காவல் படகுகளில் கடல்வழி பாதைகள்,   ரேடார் வகை தொலைநிலை  இயக்க  அறியும் கருவி, மற்றும் கலன்களை எளிதாக அடையாளம் காண உதவிடும் குறியீடுகள் ஆகியவை  அடங்கிய அறிவிப்பு பதாகைள் போன்ற மேம்பட்ட வசதிகளும் இருக்கும்.
$19 மில்லியன் மதிப்பிலான இந்த ஆறு படகுகளையும் கடல்துறை துறைமுக ஆணையம் ஐந்தாண்டுகள் வைத்திருக்கும்.
முழு விவரம் 3.2.2012 தமிழ் முரசில்

war memorial
Friday, February 3rd, 2012

- முஹம்மது ஹாஷிம் -

இரண்டாம் உலகப் போரில் சிங்கப் பூரைக் காக்க உயிரைத் தியாகம் செய்தவர்களை மறக்கக்கூடாது. எங்களின் நினைவில் இருந்து அவர்கள் என்றும் மறைய மாட்டார்கள் என்று கூறியபோது சாங்கி அரும்பொருளகத்தின் இயக்குநரும் சிங்கப்பூர் வரலாற்று ஆலோசனை நிறுவனத்தின் இயக் குநருமான திரு ëஜயதுரையின்,
50, குரல் தழுதழுத்தது. 
அவரைத் தொடர்ந்து  தேசிய மரபுடைமை வாரியத்தின் தலைமை நிர்வாகி மைக்கல் கோவும், 50, நேற்றுக் காலை நடந்த செய்தி யாளர் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றினார்.
1942ஆம் ஆண்டில் சிங்கப்
பூரை ஜப்பானியர்கள் கைப்பற்றி னர். அதன் 70ஆம் ஆண்டு நிறைவு இந்த ஆண்டு அனுசரிக்
கப்படுகிறது.
அதன் தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகள் பற்றி விளக்குவதற்கு நேற்று செய்தியாளர் கூட்டம் நடை பெற்றது.
முழு விவரம் 3.2.2012 தமிழ் முரசில்

 

eng-lesson
Friday, February 3rd, 2012

உள்ளூர் ஆசிரியர்களின் கதைகள் அடங்கிய புத்தகம் அடுத்த ஆண்டு ஆங்கிலப் பாடத் திட்டத்தில் அங்கம் பெறவிருக்கிறது.
கல்வி அமைச்சுக்கு வந்தி ருந்த 200 கதைகளில் இருந்து 12 கதைகள்   தொடக்கப்  பள்ளிகளில் ஆங்கிலப் பாடம் கற்றுத் தர தேர்வு செய்யப் பட்டுள்ளன.
‘Meal To Remember and other stories’  மற்றும்  ‘My Pasar Malam and other stories’ ஆகிய  இரு புத்தகங் களில் இந்தக் கதைகள் இடம்பெற்றுள்ளன.
தொடக்கப் பள்ளிகளின் ஆங்கிலப் பாடம் கற்றலில் பயன்பாடு காணவுள்ள இந்தப் இரு புத்தகங்களையும் கல்வி அமைச்சர் ஹெங் சுவீ கியட் நேற்று வெளியிட்டார்.
முழு விவரம் 3.2.2012 தமிழ் முரசில்

 

DINAKARAN
Friday, February 3rd, 2012

- வீ. பழனிச்சாமி,  செய்தி ஆசிரியர் -

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் அடுத்த தொகுதி நியமன நாடாளு மன்ற உறுப்பினர்கள் ஒன்பது பேரின் பெயர்களை நேற்று மாலை நாடாளுமன்ற அலுவலர் வெளி யிட்டார்.
அதன்படி, அந்த ஒன்பது பேரில் ஒருவராக இந்திய சமூகத்துக்கு நன்கு அறிமுகமான திரு ராமசாமி தினகரனும் தேர்வு பெற்றுள்ளார்.
ஜே.ஜி. மெல்வானி நிறுவனங்
கள் குழுமத்தின் நிர்வாக இயக்கு நராகப் பணியாற்றும் 60 வயது திரு தினகரன், தொழில்கள் பிரிவில் தேர்வு பெற்று உள்ளார்.
நியமன நாடாளுமன்ற உறுப்
பினர்களாகத் தேர்வு பெற்றிருக்கும் இதர எட்டு பேர்: குடிமை மற்றும் மக்கள் பிரிவில், ரிபப்ளிக் பலதுறை தொழிற்கல்லூரியின் சுற்றுச்சூழல் கல்வித் துறையின் துணைப் பேராசி ரியர் ஃபைஸா ஹாஜி அகம்மது ஜமால், 51, தனிநபர் பிரிவில், சிங்கப் பூர் அனைத்துலக விவகாரக் கழகத்
தின் தலைமை இயக்குநர் திரு நிக்கலஸ் ஃபாங், 36, ஊடக, கலைகள், விளையாட்டு அமைப்பு
கள் பிரிவில், முழு நேர மேடை மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஜேனிஸ் கோ, 38, சமூக சேவை பிரிவில், தேசிய தொண்டூழிய மற்றும் நன்கொடை நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லோரன்ஸ் லியன், 41, தொழிலாளர் பிரிவில் சிங்கப்பூர் கடல்துறை அதிகாரிகள் தொழிற்சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் மேரி லியூ, 49, உயர்கல்வி நிலையங்கள் பிரிவில், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழகத்தின் சட்டத்துறை உதவி பேராசிரியர் யூஜின் டான், 41, வர்த்தகம் மற்றும் தொழில்துறை பிரிவில், டிபிஎஸ் வங்கியின் சொத்து நிர்வாகப் பிரிவின் நிர்வாக இயக்குநர் கேரி டான், 44, இறுதி யாக, வர்த்தகம் மற்றும் தொழில்
துறை பிரிவில், பசிபிக் இன்டர்நேஷ னல் லைன்ஸ் நிறுவனத்தின் நிர் வாக இயக்குநர் திரு டியோ சியோங் செங், 57 ஆகியோர்.
சிங்கப்பூரின் அங்கீகாரம் பெற்ற பொதுக் கணக்கரான திரு ஆர். தினகரன், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் நன்யாங் வர்த்தகப் பள்ளியில் வர்த்தக நிர்வாகத் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்.
முழு விவரம் 3.2.2012 தமிழ் முரசில்

 

KSHANMUGAM
Friday, February 3rd, 2012

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் கா.சண்முகமும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லரி கிளின்டனும் இரு நாடுகளுக்கும் இடையேயான நீண்ட கால உறவு உன்னத நிலையில் இருப்பதாகக் கூறியுள்ளனர்.
இரு நாடுகளுக்குமிடையேயான உறவின் ‘பன்முக வளர்ச்சி’யைப் பாராட்டிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லரி கிளின்டன் இருதரப்பு உறவு பெரும் பலா பலன்களை உருவாக்குவது என்று வர்ணித்தார்.
இரு தரப்பு உறவையும் வட்டாரக் கூட்டுறவையும் அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் ஒப்பந்தங்களில் நேற்று இருவரும் கையெழுத்திட்டனர்.
முழு விவரம் 3.2.2012 தமிழ் முரசில்

Syndicate content