Tuesday, February 21st, 2012
வரவு செலவுத் திட்டம் 2012 அறிக்கை குறித்து அரசாங்கத்தின் ‘ரீச்’ இணையப் பக்கத் தில் பெரும்பாலானோர் நேர் மறையான கருத்துகளையே தெரிவித்துள்ளனர்.
அதிகமான சிங்கப்பூரர்களை நிறுவனங்கள் வேலை அளிப்பது, தேவையுள்ளவர்களுக்கு உதவுதல் போன்றவற்றில் அரசின் முடிவு
களை அதிகமானவர்கள் வரவேற் றுள்ளதாக ‘ரீச்’ அமைப்பின் தலைவர் டாக்டர் ஏமி கோர் தெரிவித்தார்.
பிணைக்கப்பட்ட சமூகத்தை உருவாக்கும் முயற்சிகளில் ஒன்றாக, ஹொங் கா நார்த் வட்டார குடியிருப்பாளர்கள் கடந்த ஞாயிறு அன்று ‘முழுத் தற்காப்பு நாளை’க் கொண்டாடினர்.
இம்மாதம் 17ஆம் தேதி துணைப் பிரதமர் மற்றும் நிதி அமைச்சரான திரு தர்மன் சண்முகரத்னம் வாசித்த வரவு செலவுத் திட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதைப் போல, வலுவான, அனைவரையும் உள்ள டக்கிய சமூகத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை, டாக்டர் ஏமி கோர் இந்நிகழ்ச்சியில் மீண்டும் நினைவூட்டினார்.
முக்கிய சவால்களான மந்த மான பொருளியல் வளர்ச்சி, வருமான சமனின்மை, அதிகரித்து வரும் மூப்படைந்த சமூகம் ஆகிய வற்றை எதிர்கொள்ள இது உதவும் என்றார் அவர்.
முழு விவரம் 21.2.2012 தமிழ் முரசில்