சிங்க‌ப்பூர்

tm logo
Tuesday, February 21st, 2012
வரவு செலவுத் திட்டம் 2012 அறிக்கை குறித்து அரசாங்கத்தின் ‘ரீச்’ இணையப் பக்கத் தில் பெரும்பாலானோர் நேர் மறையான கருத்துகளையே தெரிவித்துள்ளனர்.
 அதிகமான சிங்கப்பூரர்களை நிறுவனங்கள் வேலை அளிப்பது, தேவையுள்ளவர்களுக்கு உதவுதல் போன்றவற்றில் அரசின் முடிவு
களை அதிகமானவர்கள் வரவேற் றுள்ளதாக ‘ரீச்’ அமைப்பின் தலைவர் டாக்டர் ஏமி கோர் தெரிவித்தார்.
பிணைக்கப்பட்ட சமூகத்தை உருவாக்கும் முயற்சிகளில் ஒன்றாக, ஹொங் கா நார்த் வட்டார குடியிருப்பாளர்கள் கடந்த ஞாயிறு அன்று ‘முழுத் தற்காப்பு நாளை’க் கொண்டாடினர்.
இம்மாதம் 17ஆம் தேதி துணைப் பிரதமர் மற்றும் நிதி அமைச்சரான திரு தர்மன் சண்முகரத்னம் வாசித்த வரவு செலவுத் திட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதைப் போல, வலுவான, அனைவரையும் உள்ள டக்கிய சமூகத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை, டாக்டர் ஏமி கோர் இந்நிகழ்ச்சியில் மீண்டும் நினைவூட்டினார்.
முக்கிய சவால்களான மந்த மான பொருளியல் வளர்ச்சி, வருமான சமனின்மை, அதிகரித்து வரும் மூப்படைந்த சமூகம் ஆகிய வற்றை எதிர்கொள்ள இது உதவும் என்றார் அவர்.
முழு விவரம் 21.2.2012 தமிழ் முரசில்
tm logo
Tuesday, February 21st, 2012
இம்மாதம் 28ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 9ஆம் தேதி வரை, நாடாளுமன்றம் மீண்டும் கூடவுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்கள். நண்பகல் 12 மணிக்கு நாடாளுமன்ற அமர்வுகள் தொடங்கும் என நாடாளுமன்ற அலுவலக அதிகாரி தெரிவித்தார்.
முழு விவரம் 21.2.2012 தமிழ் முரசில்

tm logo
Tuesday, February 21st, 2012
பருவநிலை மாற்ற இயக்கமான ‘பூமி நேர’ அமைப்பின் தலைமையகம் சிங்கப்பூருக்கு மாற்றப்படவுள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளாக, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைத் தலைமையிடமாகக் கொண்டு அந்த இயக்கம் செயல்பட்டது.
ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதத்தின் கடைசி சனிக்கிழமை அன்று, ஒரு மணி நேரம் மின்விளக்குகளை அணைக்குமாறு தனிநபர்கள், சமூகங்கள், வர்த்தக நிறுவனங்களை பூமி நேர இயக்கம் ஊக்கப்படுத்துகிறது.
இந்த இயக்கத்தின் நோக்கத்தை வலியுறுத்தி, முன்னெடுத்துச் செல்ல ஏற்ற வகையில், தேவையான அனைத்து வசதிகளையும் வாய்ப்புகளையும் சிங்கப்பூர் கொண்டுள்ளது என அந்த இயக்கத்தின் இணைத் தோற்றுவிப்பாளரும், செயல் இயக்குநருமான ஆன்டி ரிட்லி தெரிவித்தார்.
இந்த ஆண்டின் பூமி நேரம், மார்ச் 31ஆம் தேதியன்று இரவு 8.30 மணிக்குத் தொடங்கும்.
முழு விவரம் 21.2.2012 தமிழ் முரசில்
mcpherson
Tuesday, February 21st, 2012

தங்கள் சொந்த வேலையை ஒதுக்கி வைத்துவிட்டு, மெக்பர்சன் தொகுதிவாசிகளில் சுமார் 200 பேர் கைகளில் தூரிகைகளைப் பிடித்து அந்த வட்டாரத்தில் உள்ள புளோக்குகளின் சுவர்களில் வண்ண ஓவியங்களை வரைந் தனர்.
இம்மாதம் 18ம் தேதி சனிக்
கிழமையன்று மெக்பர்சன் குடி யிருப்புப் பேட்டையிலுள்ள பிபிட் ரோட்டில் இருக்கும் பழைய புளோக்குகளுக்கு வண்ண ஓவியங்கள் மூலம் மெருகு சேர்த்தனர்.
இத்திட்டம் அறிமுகம் கண்டதி லிருந்து தொண்டூழியர்கள், நிறு
வன ஊழியர்கள், மாணவர்கள் என சுமார் 500 பேர் இதில் பங்கு கொள்ள முன் வந்தனர்.
சமூக கலை அமைப்பான ‘சோஷியல் கிரியேட்டிவ்ஸ்’ ஏற்பாட்டில் குடியிருப்பாளர்கள் ‘வான்கோக்’ ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டினார்கள்.

முழு விவரம் 21.2.2012 தமிழ் முரசில்

alanchew
Tuesday, February 21st, 2012

அரசாங்க ஊழியருக்கு லஞ்சம் கொடுத்ததோடு, முன்னாள் மனைவியின்  $208,700 மதிப்புள்ள சொத்துகளையும் அபகரித்தவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தம் மீது சுமத்தப்பட்ட 12 ஊழல் குற்றச்சாட்டுகளில் ஆறு குற்றச் சாட்டுகளை ஒப்புக்கொண்டார் ஆலன் சியூ வீ கியங், 39.

பீஷானில் உள்ள தமது முன்னாள் மனைவி லீ சியூ லெங்கின் வீட்டில் சொத்துத் திருட்டு, வங்கி ஊழியரை ஏமாற்றி $90,000 பணம் பெற்றது ஆகிய குற்றங்களையும் தாம் செய்ததாக ஆலன் ஒப்புக் கொண்டார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் 2010ஆம் ஆண்டு அவர் மீது சுமத்தப்பட்டன. ஆனால், அதே ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் அவருக்குப் பிணை கிடைத்தது.
துவாஸ், ஜூரோங் பகுதிகளில், ஜூரோங் டவுன் கார்ப்பரேஷன் (ஜேடிசி) மூலம் வெளிநாட்டு ஊழியர்களுக்குக் குடியிருப்பு வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் இரு நிறுவனங்களின் பொது மேலாளராகப் பணியாற்றிய ஆலன், கடந்த நவம்பரில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

SILVER RIBBON LOGO
Tuesday, February 21st, 2012
வாழ்வில் எதிர்கொள்ளும் சவால் களை முறியடித்து மீண்டெழும் வகையில், ‘இளையருக்கு ஆதரவு இளையர்’ என்ற புதிய மனநலத் திட்டத்தை சுகாதாரப் பராமரிப்பு வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மனநலக் கழகத்தின் சமூக சுகாதார மதிப்பீட்டுக் குழு,  சில்வர் ரிப்பன் (சிங்கப்பூர்), சமேரிட்டன்ஸ் ஆஃப் சிங்கப்பூர் ஆகிய மூன்று அமைப்புகளின் துணையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்தத் திட்டத்திற்கு உலக மனநலக் கூட்டமைப்பும் ஆதரவு தெரி வித்துள்ளது.
இத்திட்டத்தின் மூலம், கல்வி நிலையங்களில் பயிலும் மாண வர்கள், சமூக நிறுவனங்களின் இளம் தலைவர்கள் போன்ற 17 முதல் 25க்கு உட்பட்ட இளையர் களுக்கு மனநலம் குறித்த பயிற்சி அளிக்கப்படும்.
மூன்று நாட்கள் நடக்கும் பயிற்சிப் பட்டறையில், எச்சரிக்கை அறிகுறிகளை துவக்கத்திலேயே கண்டறிவது, உதவி கோரும் நடவடிக்கைகளை ஊக்குவிப்பது,   தங்களுக்கும் மற்றவர்களுக்கும்  ஆதரவான சூழ்நிலையை உரு வாக்குவது போன்றவை குறித்து இளையர்கள் கற்றுக்கொள்ளலாம்.
முழு விவரம் 21.2.2012 தமிழ் முரசில்

REMY ONG - CAR
Tuesday, February 21st, 2012

சிங்கப்பூரின் பிரபல உருட்டுப் பந்து விளையாட்டாளர் ரெமி ஓங், 33,  நேற்று முன்தினம் தமது காரில் சென்றபோது எதிர்பாராதவிதமாக  தெரு நாய் ஒன்றின் மீது மோதி
விட்டுச் சென்ற சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேஷனல் சர்வீஸ் ரிசார்ட் மற்றும் சாங்கி கன்ட்ரி கிளப்பிற்கு வெளியே அவர் தமது  ‘போர்ஷே’ ஸ்போர்ட்ஸ் காரில் சென்றபோது, அவரது கார், நாய் ஒன்றின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

தொழில்நுட்ப கல்விக்கழகத்தில் பயின்று வரும் 18 வயது மாணவரான  டேனி இங், சம்பவம்  நடந்த அன்று தமது நண்பர்களுடன் அப்பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தததாகவும், அப்போது சாலையில் காயமடைந்த நிலையில் நாய் ஒன்று கிடந்ததைத் தாம் பார்த்ததாகவும் கூறியுள்ளார்.

உடனே அந்தப் பிராணியை   டேனி சாலையின் ஓரத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

அப்போது அந்தப் பிராணி எழுந்திருப்பதற்கு முயற்சி செய்த தாகவும் ஆனால் 20 நிமிடங்கள் கழித்து அது இறந்துவிட்டதாகவும் எங் தெரிவித்தார்.

முழு விவரம் 21.2.2012 தமிழ் முரசில்

tm logo
Tuesday, February 21st, 2012
சிங்கப்பூரர்களுக்கு சுகாதார பராமரிப்பு கட்டுப்படியாகக் கூடியதாகவும் அனைவருக்கும் சென்றடையும் விதத்திலும் ஆக்க சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற் கொண்டுள்ளது.
குறிப்பாக நடுத்தர வருமான மற்றும் வசதி குறைந்த குடும்பத்தினர் இதன் மூலம் அதிக பயன் பெறுவர்.
இதன் தொடர்பில் நீண்ட நாள் நோயாளிகளுக்கான  இல்ல பராமரிப்பு, பகல் நேர பாரமரிப்புக்கான மானியங்கள் பெறும் விதிமுறைகள் தளர்த்தப் பட்டுள்ளன.
இதன்படி, மானியம் பெறுவதற்கான அதிகபட்ச குடும்ப வருமானம் $2,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னர் இந்த வரம்பு $1,400 ஆக இருந்தது. புதிய உச்ச வரம்பின்படி மூன்றில் இரண்டு பங்கு சிங்கப்பூர் குடும்பங்கள் பயன்பெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
நீண்டகால, இடைப்பட்ட கால பராமரிப்புக்கான மானிய முறையின் மேம்பாடு முக்கிய மாற்றங்களில் ஒன்று. இதற்கான மானியங்கள் அதிகரிக்கப் படுகிறது.   அதிமான நடுத்தர வருமான குடும்பத்தினர் பலன் பெறவும் வகை செய்யப்படுகிறது.
புதிய விதிமுறைகளின்படி அதிக அளவிலான மூத்த சிங்கப்பூரர்கள் வீட்டில் இருந்த படி சுகாதாரப் பராமரிப்புச் சேவையைப் பெறுவர் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
முழு விவரம் 21.2.2012 தமிழ் முரசில்
tm logo
Monday, February 20th, 2012
வீவக அடுக்குமாடி வீடுகளில் நடப்பதற்காக உள்ள தாழ்வாரத்தில் கண்டபடி பொருட்களை போடாமல் இருக்க சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கடந்த மாதம் சில வழிகாட்டிக் குறிப்புகளை நகர மன்றத்திற்கு அனுப்பியது.
அந்த வழிகாட்டி குறிப்புகளுக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத் துள்ளது.
அவசர காலத்தில் இடையூறு இன்றி செயல்பட இத்தகைய வழி காட்டிகள் உதவியாக இருக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் களும், துணை மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர்.
பொதுத் தாழ்வாரத்தில் 1.2 மீட்டர் அகலத்திற்கு மேல் உள்ள பொருட்களை வைக்கக்கூடாது.
படிக்கட்டுகளின் திருப்பத்தில் உள்ள பகுதியில் துணிகளைத் தொங்க விடுவது, செடி, பூ ஆகிய வற்றைக் கொண்ட தொட்டிகளை வைப்பது ஆகியனவும் கூடாது என்கிறது குடிமைத் தற்காப்புப் படையின் வழிகாட்டிக் குறிப்பு.
மரச் சாமான்கள் உள்ளிட்ட பெரிய பொருட்களை வீடுகளுக் கான பொதுப் பாதையில் அமைப் பதை தடுக்கும் நோக்கத்துடன் அனுப்பப்பட்டுள்ள குறிப்புகளால் நகர மன்றத்தின் பணி எளிமையாகி விட்டது.

முழு விவரம் 20.2.2012 தமிழ் முரசில்
tm logo
Sunday, February 19th, 2012
கடந்த ஜனவரி 21ம் தேதி பின்னிரவு 3 மணிக்கு பெஞ்சுரு ரோடு அருகே தங்களிடம் 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று, கொள்ளையடித்ததாக இரு ஆடவர்கள் போலிசிடம் புகார் தெரிவித் திருந்தனர். தாங்கள் கத்தியைக் காட்டி மிரட்டப் பட்டதாகவும், $300 பெறுமான கைபேசி, பணப்பை ஆகியன தங்களிடம் கொள்ளையடிக்கப்பட்டதாக வும் அவர்கள் தங்களது புகாரில் தெரிவித் திருந்தனர். கிளமெண்டி போலிசார் மேற்கொண்ட தீவிர விசாரணையின் முடிவில் இருபதுகளின் வயதுடைய அந்த ஆடவர்கள் கொடுத்தது பொய்ப் புகார் என தெரிய வந்தது. அதுகுறித்து அவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது. பொய்ப் புகாருக்கு ஓராண்டு வரையிலான சிறை, அதிகபட்சம் $5,000 அபராதம் என்கிறது சட்டம்.
Syndicate content