சிங்க‌ப்பூர்

tm logo
Friday, January 27th, 2012
ஓசிபிசி வங்கியின் பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகள் நேற்று காலை மின்சாரத் தடையால் சற்று நேரம் பாதிக்கப்பட்டன.
ஆனால் மதியம் 12 மணிக்குள் சேவை வழக்க நிலைக்குத் திரும்பியதாகவும், வாடிக்கையாளர்களால் சிரமமின்றி  பங்குகளை வாங்கி, விற்க முடிந்ததாகவும் வங்கியின் அறிக்கை தெரிவித்தது.  


முழு விவரம் 27.1.2012 தமிழ் முரசில்
STAG-CEO
Friday, January 27th, 2012
ஏற்கனவே வாகனமோட்ட இரண்டாண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்த ஒரு வர்த்தகர், அந்தத் தடையை மீறி வாகனமோட்டிய குற்றத்திற்காக அவருக்கு ஆறு வார சிறைத் தண்டனையும், வாகனமோட்ட மேலும் மூன்று ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டது.
Stag குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான 34 வயது வின்செண்ட் ஹோவ் (படத்தில் வெள்ளை சட்டையுடன்), காப்பீடு இல்லாமலும் 2010ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி தீவு விரைவுச் சாலையில் வாகனமோட்டினார். அதற்காக 1,400 வெள்ளி அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டது.

முழு விவரம் 27.1.2012 தமிழ் முரசில்
tm logo
Friday, January 27th, 2012
தமது தோழியைத் தாக்கி கடுமையான காயம் விளைவித்த வேலையில்லாத ஓர் ஆடவருக்கு நேற்று ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஏற்கனவே திருமணமான அந்த 43 வயது ஆடவர் கடந்த ஆண்டு ஜூன் 21ம் தேதி ஈசூனில் உள்ள ஓர் வீட்டில் அந்தக் குற்றத்தைப் புரிந்ததை ஒப்புக் கொண்டார்.
தாக்கப்பட்டவர் 33 வயது சொத்துச் சந்தை முகவர். அவருக்கு திருமணமாகாமல் ஏற்கனவே ஒரு குழந்தை இருப்பதால், பிள்ளையின் நலன் கருதி அந்த இருவரின் பெயரும் வெளியிடப்படவில்லை.

முழு விவரம் 27.1.2012 தமிழ் முரசில்
tm logo
Friday, January 27th, 2012
தமது முன்னாள் காதலியிடம் கத்தியை நீட்டி மிரட்டிய சீன நாட்டவருக்கு நேற்று 5,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
26 வயது சிங்கப்பூர் நிரந்தரவாசியான ஷி லிப்பிங், 10 செண்டிமீட்டர் நீளக் கத்தியை குமாரி யாங் மெய்ச்சி முன்பு காட்டி மிரட்டியதை ஒப்புக் கொண்டார்.
அந்தச் சம்பவம் கடந்த ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி கிலிமார்ட் ரோட்டில் உள்ள ஷியின் வீட்டில் நிகழ்ந்தது.


முழு விவரம் 27.1.2012 தமிழ் முரசில்
tm logo
Friday, January 27th, 2012
பிரெஞ்சு வர்த்தகரான சில்வெய்ன் கிறிஸ்ட்டியன், தமது அமெரிக்க-வியட்நாமியக் காதலியான ஜோஸ்லினை படுக்கையில் தள்ளி, தலையணை கொண்டு அவரது முகத்தை மூடி முச்சுச் திணறடிக்க விட்டார்.
கடந்த ஆண்டு மார்ச் 29ம் தேதி புரிந்த அந்தக் குற்றத்துக்காக அவருக்கு நேற்று 4,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.


முழு விவரம் 27.1.2012 தமிழ் முரசில்
POLICE-IDRIS
Friday, January 27th, 2012
போலிஸ் துறையில் ஸ்டாஃப் சார்ஜண்ட் பதவியில் இருந்த 37 வயது இட்ரிஸ் மாக்ரோப், சட்ட விரோதமாக வட்டித் தொழில் செய்து வந்த சிலரின் கேளிக்கை விடுதியில் பங்கும் வைத்திருந்தார்.
அந்தக் குற்றத்திற்காக அவருக்கு நேற்று 10 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் மீது இரண்டு குற்றங்கள் சுமத்தப்பட்டன. ஒன்று, போலிஸ் ஆணையாளரின் அனுமதி பெறாமல் அந்தத் தொழிலில் நுழைந்தது. இரண்டாவது, அவருடடைய கூட்டுப் பங்காளிகளின் சட்ட விரோதமான நடவடிக்கைகளை அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் இருந்தது.
அதே மாதிரியான வேறு இரண்டு குற்றச்சாட்டுகளும் கவனத்தில் கொள்ளப்பட்டன.


முழு விவரம் 27.1.2012 தமிழ் முரசில்
PRODUCTION
Friday, January 27th, 2012
சிங்கப்பூரின் உற்பத்தித் துறை எதிர்பார்க்கப்பட்டதை விட கடந்த டிசம்பர் மாதம் அதிக வளர்ச்சி கண்டிருக்கிறது.
முந்தைய ஆண்டோடு ஒப்பிடும் போது டிசம்பர் மாதத்திற்கான வளர்ச்சி 12.6 விழுக்காடாக இருந்தது என பொருளியல் வளர்ச்சிக் கழகம் நேற்று அறிவித்தது.
கடந்த டிசம்பர் மாதத்திற்கான  உற்பத்தித் துறை வளர்ச்சி சுமார் 7 விழுக்காடு விழுக்காடு இருக்கும் என்று பொருளியல் வல்லுநர்கள் முன்னுரைத்திருந்தனர்.
அந்த முன்னுரைப்பை விஞ்சிய இந்த வளர்ச்சிக்கு உயிர் அறிவியல் துறையில் நிகழ்ந்த அதிக நடிவடிக்கைகளே முக்கியக் காரணம் என்றும் கழகம் தெரிவித்தது.


முழு விவரம் 27.1.2012 தமிழ் முரசில்
KESAVAPANI-SRNATHAN-DORAISINGAM
Friday, January 27th, 2012

சிங்கப்பூரின் பழம்பெரும் வரலாற்று ஆசிரியரான திரு சேமுவல் துரைசிங்கம், சிங்கப்பூரை நிர்மாணித்த முதல் தலைமுறை தலைவர்களில் ஒருவரான டாக்டர் கோ கெங் சுவீயைப் பற்றிய நூலை எழுதி வெளியிட்டிருக்கிறார்.

Working for Dr Goh Keng Swee என்ற அந்தப் புத்தகத்தில் டாக்டர் கோவுக்குக் கீழ் தாம் பணியாற்றிய போது ஏற்பட்ட அனுபவங்களை அவர் சுவைபட விவரித்திருக்கிறார்.

உதாரணத்திற்கு, டாக்டர் கோ தற்காப்பு அமைச்சராக இருந்த போது, அறிவிப்பு இல்லாமலேயே வெவ்வேறு ஆயுதப்படை முகாம் களுக்கு அவர் திடீர் வருகை மேற்கொள்வார்.

அவ்வாறு ஒருமுறை அவர் வந்த போது அந்த முகாமின் தலைமை அதிகாரியை முகாமில் காணவில்லை. அந்த அதிகாரி தற்காப்பு அமைச்சின் தலைமை யகத்துக்குச் சென்றிருப்பதாக டாக்டர் கோவிடம் தெரிவிக்கப் பட்டது. ஆனால் அது உண்மை இல்லை.

மறுநாள் அந்த அதிகாரி டாக்டர் கோவை அவரது அலுவலகத்தில் சந்திக்குமாறு பணிக்கப்பட்டார். உள்ளே மேஜர் என்ற பதவியுடன் சென்றவர், பதவிக் குறைப்பு செய்யப்பட்டு கேப்டனாக வெளியே வந்தார்.

முழு விவரம் 27.1.2012 தமிழ் முரசில்

tm logo
Friday, January 27th, 2012
தென்கிழக்காசியாவில் இரண்டாம் உலகப் போர் தொடங்கி 70 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, தேசிய மரபுடைமை கழகம் கண்காட்சிகளுக்கும் உலாக்களுக்கும் அடுத்த மாதம் ஏற்பாடு செய்கிறது.
சிங்கப்பூர் 1942ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி ஜப்பானியரின் கையில் சிக்கியது. இரண்டாம் உலகப் போர் நினைவுப்பாதை நடை, நினைவலை நடை, கிராஞ்சி போர்க்கால நினைவு மண்டபத்தில் சடங்கு ஆகியவை கழகம் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் உள்ளடங்கும்.

ஒரு மாதகால நினைவு நிகழ்ச்சிகளின் முக்கிய அங்கமாக, 1940களில் ஆகாயத் தாக்குதல் காப்பறையாகப் பயன்படுத்தப்பட்ட இடத்தைப் பொதுமக்கள் பார்வையிட அரிய வாய்ப்பு வழங்கப்படும்.

தியோங் பாரு ஆகாயத் தாக்குதல் காப்பறையே சிங்கப்பூரின் ஆகக்கடைசி குடிமை விமானத் தாக்குதல் காப்பறையாகக் கருதப்படுகிறது.

குவான் ச்சுவான் ஸ்திரீட், கட்டடம் 78ல் அமைந்திருக்கும் இந்தக் காப்பறை சுமார் 1,500 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. இது 13 ஐந்தறை வீடுகளின் பரப்பளவுக்கு நிகரானது.

முழு விவரம் 27.1.2012 தமிழ் முரசில்
tm logo
Friday, January 27th, 2012
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை யின் முன்னாள் ஆணையாளர் திரு பீட்டர் லிம், மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் இயக்கு
நர் திரு இங் பூன் கே ஆகியோர்  லஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் எஸ்டி இலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் பெண் அதிகாரி ஒருவரும் சம்பந்தப் பட்டுள்ளார் என்று அண்மையில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன் தொடர்பில் தனது கருத்தைத் தெரிவித்துள்ள எஸ்டி இலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், தமது அதிகாரி ஒருவர் லஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவில் விசாரணைக்கு உதவி வருவது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று அந்நிறு வனத்தின் பேச்சாளர் நேற்று கூறினார்.

முழு விவரம் 27.1.2012 தமிழ் முரசில்
Syndicate content