தமிழ்நாடு

வேலூர்: சொத்துக்குவிப்பு புகார் தொடர்பாக ஊராட்சி மன்றச் செயலாளர், அவருடைய மனைவி மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி: திருச்சி - திருவரங்கச் சாலையில் மீண்டும் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை விமான நிலையத்தில் உள்ள குப்பைத்தொட்டியில் 85 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டது.
திருவில்லிபுத்தூர்: கல்லூரி மாணவிகளைத் தவறாக வழிநடத்த முயற்சி செய்ததாக பேராசிரியை நிர்மலா தேவி மீது தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பை ஏப்ரல் 29ஆம் தேதி அறிவிப்பதாக திருவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஈரோடு: கோயம்புத்தூரில் நடந்த கார் குண்டுவெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் இதுவரை 14 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அந்த விசாரணையில் அந்தக் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் ஈரோடு மாவட்டத்தின் சத்திய மங்கல வட்டாரத்தைச் சேர்ந்த கடம்பூர் காட்டுப் பகுதிகளில் ரகசியக் கூட்டங்கள் நடத்தியது தெரிய வந்துள்ளது.