காதலரின் உறவை ஷ்ருதிஹாசன் முறித்துக்கொண்டதாக அடிபடும் பேச்சு

உலகநாயகன் கமல்ஹாசனின் மகளான ஷ்ருதிஹாசன் தனது காதலர் சாந்தனுவை சமூக ஊடகங்கள் வழி பின்தொடர்வதை நிறுத்தியுள்ளார். அத்துடன், தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றியிருந்த புகைப்படங்களையும் நீக்கியுள்ளார்.

இதனால், திடீரென அவர் தன் காதலருடனான உறவை முறித்துக்கொண்டு விட்டதாகக் கூறப்படுகிறது.

தன் தந்தையைப் போலவே சுதந்திரமாகச் செயல்படும் குணம் கொண்ட ஷ்ருதிஹாசன், மும்பையைச் சேர்ந்த சாந்தனு ஹஸாரிகா என்பவருடன் கடந்த பல ஆண்டுகளாக திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்துவந்தார்.

தங்களது காதல் பற்றி எந்த ஒரு இடத்திலும் இதுவரை மறைத்துப் பேசாத ஷ்ருதி, பொது இடங்களுக்கு காதலனுடன் வருவது, நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்வது என வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில், தற்போது இவர்களது காதல் முறிந்துவிட்டதாக திரையுலக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

அத்துடன், வழக்கமாக தனது இன்ஸ்டகிராம் பக்கம் வழி ரசிகர்களுடன் உரையாடும் பழக்கத்தையும் ஷ்ருதி கடந்த சில நாள்களாக நிறுத்தி உள்ளார்.

கடந்த மாதம் மும்பையைச் சேர்ந்த இணையத் தளம் ஒன்று ஷ்ருதியும் சாந்தனுவும் திருமணம் செய்துகொண்டுவிட்டதாக ஒரு செய்தியை வெளியிட்டபோது, “எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அப்படிச் செய்திருந்தால் அதை ஏன் நான் மறைக்க வேண்டும்?

“என்னைப் பற்றி முழுமையாக எதுவும் தெரியாமல் பொய்த் தகவலைப் பரப்பவேண்டாம்,” என்று தெரிவித்து இருந்தார்.

கடந்த ஒருமாத காலமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும், பொது இடத்திற்கு தனித்தனியாக வருவதாகவும் சினிமா வட்டாரத்தில் பேச்சுகள் எழுந்து வருகின்றன. இதுகுறித்து, அதிகாரபூர்வமான விளக்கத்தை ஷ்ருதி விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, சாந்தனுவும் சுருதிஹாசனை சமூகஊடகத்தில் பின்தொடர்வதை நிறுத்தியுள்ளார்.

‘சிலரின் உண்மை முகங்கள் இப்போதுதான் தெரியவந்துள்ளது’ எனப் புதிரான ஒரு பதிவையும் பகிர்ந்துள்ளார் ஷ்ருதி.

கடந்த மூன்று ஆண்டுகளுக்குமுன், லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கோர்ஸ்லியை காதலித்து வந்த ஷ்ருதி, 2019ஆம் ஆண்டு மனம் ஒத்து பிரிவதாக அறிவித்தார். இதனால், ஒருசில மாதங்கள் அவர் மன அழுத்தத்தில் இருந்தார். அந்த உறவில் இருந்து பிரிந்த பின்னரே அவர் சாந்தனுவுடன் பழக ஆரம்பித்தார்.

ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான ‘ஏழாம் அறிவு’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷ்ருதிஹாசன்.

இவர் நடித்த முதல் படமே இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்ததை அடுத்து, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஷால், தனுஷ் போன்றோருடன் ஜோடியாக நடித்தார்.

தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மற்ற மொழிப் படங்களிலும் கணிசமான படங்களில் நடித்துள்ளார் ஷ்ருதிஹாசன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!