திரைச்செய்தி

RATINAM-CINE
Monday, May 14th, 2012
படத்தின் தலைப்பே ஒரு கவிதையைப் போல் உள்ளது. ‘ராட்டினம்’ என்ற தலைப்புக்கும் கதைக்கும் என்ன தொடர்பு?
என்று கேட்டால், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் கே.எஸ். தங்கசாமி உற்சாகமாகி விடுகிறார்.

விவரம்: அச்சுப் பிரதியில்

KRISHNA
Monday, May 14th, 2012
‘கழுகு’ படத்தின் வெற்றியால் மிகுந்த பூரிப்பில் இருக்கிறார் இளம் நாயகன் கிருஷ்ணா.
அடுத்து காயத்ரி மூவி மேக்கர்ஸ் பாண்டியன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம். இப்படத்தை ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’ படத்தை இயக்கிய ராஜாமோகன் இயக்குகிறார்.

விவரம்: அச்சுப் பிரதியில்

PRIYAMANI
Wednesday, May 9th, 2012

நடிகைகளுக்கு எப்போதும் போட்டியிருந்தாலும் சில நடிகைகள் நட்பு பாராட்டுவதும் பரஸ்பர உதவிகளை செய்து கொள்வதும் நடந்துகொண்டுதான் உள்ளது.

அந்த வகையில் த்ரிஷாவின் புதுப்படம் வெற்றிபெற தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் ப்ரியாமணிக்கு தற்போது தெலுங்கில் வாய்ப்புகள் இல்லையென்றாலும் மனம்திறந்து த்ரிஷாவை வாழ்த்தியுள்ளாராம். ஆந்திரப் பத்திரிகைகளில் இச்செய்திதான் பரபரப்பாக அலசப்படுகிறதாம். த்ரிஷா நடித்த தம்மு தெலுங்கு படம் கடந்த 27ம் தேதி வெளியானது.

AMALA PAUL
Wednesday, May 9th, 2012
தெலுங்கு திரையுலகில் அதிக சம்பளம் கிடைப்பதால் தெலுங்குக்கு அமலாபால் சென்றுவிட்டாரோ என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்கையில், கடந்த ஆண்டு மத்தியிலே மூன்று மலையாளப் படங்களிலும் சில தெலுங்கு படங்களிலும் நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டேன். அவற்றின் படப்பிடிப்பு இப்போதுதான் தொடங்கி உள்ளன. அதனால்தான் தமிழில் அதிகப் படங்களில் நடிக்க முடியவில்லை. தெலுங்கில் அதிக சம்பளம் கிடைத்தும் இரண்டு தெலுங்குப் படங்களை நிராகரித்து விட்டேன். எனக்குப் பணம் முக்கியமல்ல. ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிக்க நான் விரும்பவில்லை என்கிறார் அமலாபால்.
dhansika1
Monday, May 7th, 2012

இயக்குநர் பாலா படமான பரதேசியில் இருந்து பூஜா நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக அரவாண் தன்ஷிகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என திரைப்பட வட்டாரம் தெரிவிக்கிறது.

நீண்ட காலமாக திரையுலகில் முகம் காட்டாமல் இருந்த பூஜாவுக்கு நல்ல வாய்ப்பு வந்தது என பேசப்பட்டது. ஆனால் திடீரென பூஜா நீக்கப்பட்டு தன்ஷிகா நடிப்பதாக கூறப்படுகிறது.

விவரம்: அச்சுப் பிரதியில்

BINDHU MADHAVI
Monday, May 7th, 2012

அஜீத் குமாருடன் நடிப்பது என்றால்  சம்பளமே வேண்டாம் என்று கூறியிருக்கிறார் நடிகை பிந்து மாதவி. ஒவ்வொரு நடிகைக்கும் ஒரு கதாநாயகனுடன் நடிப்பது வாழ்க்கையின் லட்சியமாக இருக்குமாம். அவ்வகையில் நடிகை பிந்து மாதவிக்கு அஜீத் குமாருடன் நடிப்பதே லட்சியமாம். ஒரு படத்திலாவது தல கூட நடித்துவிட வேண்டும் என்று விரும்புகிறார். இவர் பள்ளி மாணவியாக இருக்கும் காலத்திலிருந்தே அஜீத்தின் தீவிர ரசிகையாம்.

hansika-surya-anushka
Friday, April 27th, 2012

இயக்குநர் ஹரி இயக்கும் சிங்கம் 2 படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்காவும் ஹன்ஸிகாவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இவர்களுடன் விவேக், விஜயகுமார், சந்தானம், ராதாரவி, நாசர், ரகுமான் மற்றும் பல புதிய நட்சத்திரங்களும் இணைய உள்ளனர்ர. சென்னை, ஹைதராபாத், தூத்துக்குடி, திருநெல்வலி, காரைக்குடி ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெறவுள்ளன.

விவரம்: அச்சுப்பிரதியில்

cine-palai
Wednesday, April 25th, 2012

சங்ககாலத் தமிழர்களின் வழியே நிகழ்கால இன விடுதலையைப் பேசும் உலக சினிமாவாக வெளியானது ‘பாலை’ திரைப்படம். 

தமிழ்ச் சினிமாவில் சங்க கால தமிழர் வாழ்வியலை பேசிய முதல் திரைப்படம் என்பது ஒருபக்கம் இருக்க, ஈழத்தின் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் போரின் அவலத்தை மறைமுகமாகப் பேசியதால் அதிக கவனம் பெற்ற இந்தப் படத்தை இயக் குநர் செந்தமிழனும், அவரது நண்பர்களும் உருவாக்கிய விதம், தொழில்முறை தமிழ்ச் சினிமாவில் இப்படியும் ஒரு தரமான படத்தை எடுக்க முடி யும் என்பதை நிரூபித்துள்ளது.


விவரம்: அச்சுப் பிரதியில்

hansika 22-4
Sunday, April 22nd, 2012
ஹன்சிகா மோத்வானி, இனி படங்களில் நடிக்க தன்னுடைய சம்பளத்தை ரூ.1 கோடிக்கு உயர்த்தி தயாரிப்பாளர்களை மிரள வைத்திருக்கிறார்.
கோலிவுட்டில் ஹன்சிகா நடித்துள்ள ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் வெற்றியுடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது வேட்டை மன்னன், சிங்கம்-2 படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் ‘டெல்லி பெல்லி’ தமிழ் மறுபதிப்பில் நடிக்கவும்
ஒப்பந்தமாகியுள்ளார்.
மேற்கண்ட படங்களில் நடிக்க ஹன்சிகாவின் சம்பளம் ரூ.75 லட்சமாக இருக்கிறது. இந்நிலையில் இனிவரும் படங்களில் நடிக்க ஹன்சிகா ரூ.1 கோடி கேட்டுள்ளார்.
சம்பளம் கோடியைத் தாண்டினாலும் ஹன்சிகாவின் தேதிகளுக்காக தயாரிப்பாளர்கள் கூட்டம் ஒன்று, அவருடைய வீட்டு வாசலில் காத்திருப்பதாக கோலிவுட் பிரபலங்கள் தெரிவித்துள்ளார்கள்.
anjali 22-4
Sunday, April 22nd, 2012
சுந்தர் சி. இயக்கும் புதிய படம் ‘கலகலப்பு’. இதில் விமல், சிவா, அஞ்சலி, ஒவியா, சந்தானம் நடிக்கின்றனர். இந்த படத்தின் பாடல் ஒலிவட்டு வெளியிட்டு விழா வடபழனி பிரசாத் லேப் திரையரங்கில் நடந்தது. படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைர்கள் பங்கேற்றனர்.
‘கலகலப்பு’ படத்தில் அஞ்சலியும், ஓவியாவும் கவர்ச்சியாக நடித்துள்ளனர். அவர்கள் அரைகுறை ஆடையில் தோன்றும் படங்கள் சமீபத்தில் வெளியாகி திரையுலகினரை அதிர வைத்தது.
விழாவில் நடிகை அஞ்சலியிடம் இதுபற்றி கேட்டபோது அவர் கூறியதாவது, “கவர்ச்சி என்பது மீனா காலத்தில் இருந்து இருக்கிறது. அழகாக காட்டுவதுதான் கவர்ச்சி எனக்கு படத்தில் நல்ல கதாபாத்திரம். ஒரு பாடல் காட்சியில் அது போல் நடிக்க வேண்டிய இருந்ததால் நடித்தேன். அது தவறல்ல. இது வித்தியாசமான கல கலப்பான படம். நான் கலர்புல்
Syndicate content