விமான நிலையத்தை இந்தியா, ரஷ்யா வசம் ஒப்படைக்கும் இலங்கை

கொழும்பு: இலங்கையில் $209 மில்லியன் செலவில் கட்டப்பட்ட விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்திய மற்றும் ரஷ்ய நிறுவனத்திடம் ஒப்படைக்க இலங்கை அரசாங்கம் முடிவெடித்துள்ளது. இதற்கான அறிவிப்பை அந்நாட்டு அமைச்சரவை வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26ஆம் தேதி) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

அந்த அறிக்கையில், நாட்டின் பொருளியல் நிலையையும் அரசு நிறுவனங்களின் இழப்பையும் சரிசெய்யும் முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டது.

மேலும், மத்தல விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்தியாவின் ‘ஷௌர்யா ஏரோநாட்டிக்ஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்திடமும் ரஷ்யாவின் ‘ஏர்போர்ட்ஸ் ஆஃப் ரீஜியன்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனத்திடமும் 30 ஆண்டுகளுக்கு ஒப்படைக்கப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

ஒப்பந்த மதிப்பு குறித்து எந்தவொரு தகவலும் அதில் தெரிவிக்கப்படவில்லை என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

சீனாவிடமிருந்து நிதி உதவிபெற்று இலங்கையின் மத்தலம் பகுதியில் மத்தல ராஜபக்ச அனைத்துலக விமான நிலையம் கட்டப்பட்டது. 2013ஆம் ஆண்டு திறப்புவிழா கண்ட அந்த விமான நிலையம் திறக்கப்பட்டதிலிருந்து குறைந்த எண்ணிக்கையிலான விமானச் சேவை, தொடர்ச்சியான நிதி இழப்பு போன்ற காரணங்களால் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!