அனுஷா செல்வமணி

அட்சய திருதியை நாளில், வாடிக்கையாளர்கள் பலர் நகைக் கடைகளுக்குச் சென்று தள்ளுபடி விலையில் நகை வாங்க முற்படுவது வழக்கம்.
சிங்கப்பூரில் இயங்கிவரும் நிறுவனங்கள் நீடித்த நிலைத்தன்மையை நோக்கிச் செல்ல ஊக்குவிக்கும் விதமாக சிங்கப்பூரில் சுற்றுப்புறத் தீர்வுகள் வழங்கும் முதல் உற்பத்தி ஆலையான கிரீன் லேப் நிறுவனமும் நிஞ்சா வேன் தளவாட நிறுவனமும் கைகோத்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
மாணவர்கள் பள்ளிப் பருவத்திலேயே தமிழ்மொழியை ஆர்வத்துடன் கற்க வேண்டும் என்பதற்கான புதுமையான வழிகளை அறிமுகப்படுத்திக்கொண்டு வருகிறார் சிங்கப்பூரைச் சேர்ந்த உயிரோவியரான ஜெகன்நாத் ராமானுஜம், 36.
அட்சய திருதியையை முன்னிட்டு, எண் 85 சிராங்கூன் சாலையில் உள்ள ஏபிஜெ அபிராமி ஜுவல்லரி நகைக்கடையில் வைர, தங்க நகைகள் தள்ளுபடி விலையில் விற்கப்படுகின்றன.
கல்விக்கு அப்பாற்பட்டு இதர நடவடிக்கைகளிலும் சாதனை புரியும் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களுக்கு அண்மையில் விருதுகள் வழங்கப்பட்டன. பலதுறைத் தொழிற்கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இந்த ஆண்டு 11 மாணவர்களுக்கு அங்கீகாரம் கிடைத்தது.
‘விட்டிலைகோ’ எனப்படும் சரும பிரச்சினை தனது நான்கு வயதில் முதலில் கண்டறியப்பட்டபோது, ஆனந்த் சத்தி குமார் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.
பொங்கோலில் இருக்கும் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதி ஒன்றில் திரு லெட்சுமணன் முரளிதரன், 49, மிக பரிச்சயமான முகம். சக வெளிநாட்டு ஊழியர்களுக்கு எந்தப் பிரச்சினை எழுந்தாலும் அதைத் தீர்க்க கூடியவர் இவர்.
மரின் பரேட் குடியிருப்பில் வசிக்கும் சிறுவர்கள், குடும்பத்தில் ஏற்படும் நிதி நெருக்கடிச் சூழலால் பாலர் பள்ளிக் கல்வியை மேற்கொள்ள முடியாமல் போவதை முறியடிக்க, அவர்களின் குடும்பங்களுக்குக் கைகொடுக்கும் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என்று மரின் பரேட் தொகுதிக்கு உட்பட்ட ஜூ சியாட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான திரு எட்வின் டோங் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களில் பயிலும் இளம் சிங்கப்பூர் விளையாட்டு வீரர்கள் தங்களின் கல்விச் செலவுகளுக்குக் கைகொடுக்கும் வகையில் புதிய உபகாரச் சம்பளத் திட்டத்திற்கு விரைவில் விண்ணப்பிக்கலாம் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் ஏப்ரல் 26ஆம் தேதி தெரிவித்தார்.
தமிழ்மொழி விழாவை முன்னிட்டு சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை ‘இன்பத்தமிழும் ஆற்றல்மிகு இளைய தலைமுறையும்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது.