அட்சய திருதியையை முன்னிட்டு, எண் 85 சிராங்கூன் சாலையில் உள்ள ஏபிஜெ அபிராமி ஜுவல்லரி நகைக்கடையில் வைர, தங்க நகைகள் தள்ளுபடி விலையில் விற்கப்படுகின்றன.
நகை விலை ஏற்றம் கண்டுள்ள வேளையில், வாடிக்கையாளர்கள் இந்தத் தள்ளுபடி மூலம் உலகத்தரச் சான்றிதழ் பெற்ற நகைகளை மலிவான விலையில் வாங்கிக்கொள்ள முடியும்.
வைர நகைகளுக்கு 50 விழுக்காடு விலைத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. குறைந்த எடையில் தரமான வைர நகைகளை வாங்கி வாடிக்கையாளர்கள் மூன்று தவணைகளில் பணம் செலுத்தலாம்.
40 கிராமிலிருந்து 20 கிராம் எடைக்குக் குறைக்கப்பட்ட ‘இலைட் டெம்பல் கலெக்ஷன்’ தங்க நகைகளுக்குச் செய்கூலியில் 40 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
வைர நகைக்கும் தங்க நகைக்கும் வழங்கப்படும் சலுகை மே 12ஆம் தேதி வரை பொருந்தும். தள்ளுபடிக் காலத்தில் நகை வாங்க முடியாத வாடிக்கையாளர்கள் நகைச் சேமிப்புத் திட்டத்தின் மூலம் இதர நாள்களில் நகை வாங்கலாம்.
“இந்தச் சேமிப்புத் திட்டத்தில் சேரும்போது வாடிக்கையாளர்கள் 12 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் $100 பணம் செலுத்தினால் போதும். 13வது மாதத்தில் அவர்கள் விரும்பிய நகையை வாங்கலாம்,” என்று ஏபிஜெ அபிராமி ஜுவல்லரி நகைக்கடையின் தலைமை நிர்வாக அதிகாரி ராமநாதன் கூறினார்.