‘தம்பி’ சஞ்சிகை கதவை மூடியது

ஹாலந்து வில்லேஜில் லோரோங் லிப்புட் சாலையில் கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டு வந்த ‘தம்பி’ சஞ்சிகைக் கடை, ஞாயிற்றுக்கிழமையுடன் (மே 5) இரவு 9.20 அளவில் தனது கதவுகளை இழுத்து மூடியது.

நீர் தோய்ந்த கண்களுடன் கடை உரிமையாளர் பெரியதம்பி செந்தில்முருகன், 49, கடையின் கடைசி நாளன்று திரண்ட நெடுநாள் வாடிக்கையாளர்களை உபசரித்தார்.

பலர் அவருடன் படமெடுத்ததுடன், அவரது தோளில் தட்டி ஆறுதல் வார்த்தைகளைக் கூறினர். அவர்கள் திரு செந்திலுடன் புகைப்படம் எடுத்து, தம்பி கடை பற்றிய இறுதி நினைவுகளை ஆவணப்படுத்தினர்.

திரு செந்தில்முருகன் பட்டுக்கோட்டையில் பிறந்தவர். கடையைத் தொடங்கிய அவரின் தாத்தாவும் பட்டுக்கோட்டையைப் பூர்வீகமாகக் கொண்டவர். ஒவ்வொருநாளும் விடிகாலையில் செய்தித்தாள் விநியோகம் செய்துவிட்டு காலை 9 மணி அளவில் கடைக்கு வந்து வேலையைத் தொடங்குவார். “இனிமேல் கடை இல்லை,” என்றபோது அவர் குரலில் சொல்ல முடியாத வருத்தம் தெரிந்தது.

தகவல்: கி.ஜனார்த்தனன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!