இஸ்லாமிய வெறுப்புணர்வுக்குக் கனடாவில் இடமில்லை: ட்ரூடோ

ஒண்டாரியோ: கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஒண்டாரியோ மாநிலத்தின் மிசிஸ்சாகுவா நகரப் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்துள்ளார்.

அந்தச் சம்பவம் வெறுப்புணர்வுக் குற்றமாக விசாரிக்கப்படும் வேளையில், அது நாட்டில் இஸ்லாமிய சமயத்துக்கு எதிரான வெறுப்பு அதிகரிப்பதைக் காட்டுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கருத்துரைத்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்தப் பள்ளிவாசலின் சன்னல் வழியே யாரோ இரு பாறைகளை வீசியதாகக் காவல்துறை கூறியது. சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என்று சிபிசி நியூஸ் தெரிவித்தது.

இந்நிலையில், இஸ்லாமிய சமயம் மீதான வெறுப்புணர்வுக்குக் கனடிய சமுதாயத்தில் இடமில்லை என்று பிரதமர் ட்ரூடோ, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“2017ஆம் ஆண்டு கியூபெக் நகரப் பள்ளிவாசலில் நடத்தப்பட்ட தக்க்குதல் மற்றும் இஸ்லாமிய வெறுப்புணர்வுக்கு எதிரான நடவடிக்கைகளை தேசிய அளவில் நினைவுகூரும் நாளில், மிசிஸ்சாகுவா பள்ளிவாசலில் நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது, ஏற்றுக்கொள்ள முடியாதது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்,” என்று திரு ட்ரூடோ கூறினார்.

நாடு முழுவதும் இஸ்லாம் மீதான வெறுப்புணர்வு அபாயகரமான அளவில் அதிகரிப்பதை இந்தத் தாக்குதல் காட்டுகிறது என்று கனடிய முஸ்லிம்களுக்கான தேசிய மன்றம் கூறியுள்ளது.

காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான போர் தொடங்கியதிலிருந்து கனடாவில் முஸ்லிம் வெறுப்புணர்வைக் காட்டும் குற்றச்செயல்கள் அதிகரித்திருப்பதாக கடந்த நவம்பரில் டொரோண்டா அதிகாரிகள் கூறியிருந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!