சூர்யா: வாடிவாசல், புறநானூறு படங்கள் நிச்சயம் உருவாகும்

‘வாடிவாசல்’, ‘புறநானூறு’ ஆகிய படங்களில் தாம் நடிக்கப்போவது உறுதி என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

இரு படங்களையும் தற்காலிகமாகத் தள்ளி வைத்துள்ளதாக அவர் கூறினார்.

அண்மையில் தனது ரசிகர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் சூர்யா. அப்போது ரசிகர் ஒருவர் ‘வாடிவாசல்’, ‘புறநானூறு’ படம் குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த சூர்யா, “இரு படங்களுக்கானப் பணிகளைத் தற்காலிகமாகத் தள்ளி வைத்திருக்கிறோமே தவிர, அவற்றைக் கைவிடவில்லை. இரு படங்களும் ரசிகர்கள் எதிர்பார்ப்பதுபோல் பெரிய படைப்புகளாக உருவாகும். இதில் சந்தேகமே இல்லை,” என்று குறிப்பிட்டுள்ளார்.

வாடிவாசல் படத்தை வெற்றிமாறனும் புறநானூறு படத்தை சுதா கொங்கராவும் இயக்க உள்ளனர். சில பிரச்சினைகள் காரணமாக இப்படங்கள் கைவிடப்பட்டதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில், இரு படங்களிலும் தாம் நடிப்பதை உறுதி செய்துள்ளார் சூர்யா. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!