கொலையுண்ட சீக்கியப் பிரிவினைவாதி: கனடாவுடன் ஒத்துழைக்கும் இந்தியா

ஒட்டாவா: கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதியன்று சீக்கியப் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜார், கனடாவில் உள்ள சீக்கியக் கோயிலுக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவரது கொலைக்கு இந்திய உளவுத்துறைதான் காரணம் என்று கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சுமத்தினார்.

அதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு கசந்தது.

இந்நிலையில், ஹர்தீப் சிங்கின் கொலை தொடர்பான விசாரணையில் இந்தியா தற்போது கனடாவுடன் ஒத்துழைத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இருதரப்பு உறவு மேம்பட்டு வருவதாக கனடா தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜோடி தாமஸ் தெரிவித்தார்.

ஹர்தீப் சிங்கின் கொலை தொடர்பாக நடத்தப்படும் விசாரணையில் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்று கனடா கடந்த ஆண்டிலிருந்து அழுத்தம் தந்து வந்தது.

இதற்கிடையே, அமெரிக்காவில் சீக்கியப் பிரிவினைவாதி ஒருவரைக் கொல்ல தீட்டப்பட்ட சதித்திட்டத்தை முறியடித்ததாக அமெரிக்க அதிகாரிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!