ஆறு வயது மகனை முதலைகளுக்கு இரையாக்கிய தாய்!

டாண்டேலி: குடும்பப் பிரச்சினை காரணமாக, பெண் ஒருவர் தன் ஆறு வயது மகனை முதலைகள் நிரம்பிய நீரோடையில் வீசிவிட்டுச் சென்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் சனிக்கிழமையன்று (மே 4) இந்தியாவின் கர்நாடக மாநிலம், உத்தர கன்னடா மாவட்டத்தில் நிகழ்ந்தது.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை, முதலைகள் பாதி கடித்துத் தின்ற நிலையில் அச்சிறுவனின் சடலத்தைக் காவல்துறையினர் மீட்டனர்.

சாவித்திரி ரவி ஷிராந்தி என்ற அப்பெண், இரவு 7 மணியளவில் தன் வீட்டிற்குப் பின்புறமாக ஓடும் நீரோடையில் தன் ஆறு வயது மகன் வினோத்தைத் தூக்கி வீசியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த நீரோடை, டாண்டேலி முதலைப் பூங்காவை ஒட்டி அமைந்துள்ளது.

இரவு நேரம் என்பதால் அதிகாரிகளால் மீட்புப் பணியில் ஈடுபட இயலவில்லை. மறுநாள் காலையில் வினோத்தின் உடலை மீட்ட அதிகாரிகள், பின்னர் அதனை உடற்கூறாய்விற்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, வினோத்தின் தாய் சாவித்திரியையும் அவனுடைய தந்தை ரவிக்குமாரையும் காவல்துறை கைதுசெய்து, வழக்கு பதிந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!