கொழும்பு: ஆசியக் கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கு இலங்கை அணி தகுதிபெற்றது.
வியாழக்கிழமையன்று இலங்கையும் பாகிஸ்தானும் மோதிய ‘சூப்பர் 4’ சுற்றுப் போட்டி தொடங்குவதற்கு முன்பே மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி 42 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.
முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 42 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 252ஓட்டங்கள் எடுத்தது.
அந்த அணியின் முகம்மது ரிஸ்வான், அப்துல்லா ஷபீக் ஆகியோர் அரை சதங்கள் அடித்தனர்.
அடுத்து 253 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கியது இலங்கை அணி.
இலங்கையின் குஷால் மெண்டிஸ் - சதீரா சமரவிக்ரம இணை அற்புதமாக விளையாடியது.
மிகச் சிறப்பாக விளையாடிய குஷால் மெண்டிஸ் 87 பந்துகளில் 91 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.
விறுவிறுப்பாகச் சென்ற ஆட்டத்தின் கடைசிப் பந்தில் இரண்டு ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், அசலங்கா இரண்டு ஓட்டங்கள் எடுத்து, இலங்கை அணியை இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார்.