ஆசியக் கிண்ண இறுதி போட்டியில் இந்தியா - இலங்கை மோதல்

கொழும்பு: ஆசியக் கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கு இலங்கை அணி தகுதிபெற்றது.

வியாழக்கிழமையன்று இலங்கையும் பாகிஸ்தானும் மோதிய ‘சூப்பர் 4’ சுற்றுப் போட்டி தொடங்குவதற்கு முன்பே மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி 42 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.

முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 42 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 252ஓட்டங்கள் எடுத்தது.

அந்த அணியின் முகம்மது ரிஸ்வான், அப்துல்லா ஷபீக் ஆகியோர் அரை சதங்கள் அடித்தனர்.

அடுத்து 253 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கியது இலங்கை அணி.

இலங்கையின் குஷால் மெண்டிஸ் - சதீரா சமரவிக்ரம இணை அற்புதமாக விளையாடியது.

மிகச் சிறப்பாக விளையாடிய குஷால் மெண்டிஸ் 87 பந்துகளில் 91 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். 

விறுவிறுப்பாகச் சென்ற ஆட்டத்தின் கடைசிப் பந்தில் இரண்டு ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், அசலங்கா இரண்டு ஓட்டங்கள் எடுத்து, இலங்கை அணியை இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!