சிவகார்த்திகேயன் படத்திற்கு எப்போதுமே ஒரு வரவேற்பு மக்களிடம் இருக்கும். பொங்கலை ஒட்டி வெளிவந்த அயலான் படமும் மக்களை கவர்ந்திருக்கிறது.
ஒரே வாரத்தில் கிட்டத்தட்ட 60 கோடி வசூலை பெற்று தொடர்ந்து லாபத்தை சம்பாதித்து வருகிறது.
ஆனால் இந்தப் படத்தை வெளியிட கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக அவர் போராடி இருக்கிறார். கொரோனா காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட படப்பிடிப்பு பல தடங்கல்களை எதிர்கொண்டது. ஒரு கட்டத்தில் இப்படம் வெளியாகுமா ? இல்லையா ? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. விடாப்பிடியாக படக்குழு இருந்து பல தியாகங்கள் செய்து இப்படத்தை வெளியிட்டுள்ளனர். இப்படத்தை இயக்கியதற்காகவும் நடித்ததற்காகவும் ரவிக்குமாரும் சிவகார்த்திகேயனும் சம்பளமே வாங்கவில்லையாம்.
படத்தை எடுத்து முடித்த பிறகு வெளியிடுவதற்கும் பிரச்சினைகளைச் சந்தித்து இருக்கிறார். 27 கோடி ரூபாய் கடனை அடைத்த பிறகுதான் அயலான் படத்தை வெளியிட முடியும் என்று ஒரு பஞ்சாயத்து இவர் மீது வைக்கப்பட்டது.
அவருக்கு கைகொடுத்தவர் கோல்ட் மைன் தயாரிப்பாளர் மனிஷ். தமிழ்ப் படங்களை இந்தியில் வெளியிடும் உரிமைகளை வாங்கிக் கொடுக்கும் இவர் சில படங்களை இயக்கியும் உள்ளார்.
இவர் சிவகார்த்திகேயனிடம் கூட்டணி வைப்பதற்காக முன்னரே தேதி கேட்டிருக்கிறார். இந்தப் பணப் பிரச்சினை வந்ததும் சிவகார்த்திகேயன் அவரை நாடினார். அவருக்கு தேதி கொடுத்ததுடன், சம்பளமாக ரூ.35 கோடி பேசிவிட்டார். அதற்காக முன்பணமாக ரூ.20 கோடி பெற்றிருக்கிறார். ரூ.27 கோடி கடனில் ரூ.20 கோடியைச் செலுத்தி படத்தை வெளியிட்டுள்ளார்.