மியன்மாருக்கு உதவிப்பொருள்களை அனுப்பத் தொடங்கிய தாய்லாந்து

பேங்காக்: ராணுவ ஆட்சியின்கீழ் இருக்கும் மியன்மாருக்கு திங்கட்கிழமை (மார்ச் 25) முதல் தாய்லாந்து உதவிப்பொருள்களை அனுப்பத் தொடங்கியது.

மனிதநேயத் திட்டத்தின்கீழ் இடம்பெறும் இந்நடவடிக்கையின் முதற்கட்டமாக அரிசி, உலர் உணவுப்பொருள்கள், மற்ற இன்றியமையாத் தேவைகள் அடங்கிய 4,000 பைகள் அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றின்மூலம் 20,000 பேர் பயன்பெறுவர் எனக் கூறப்பட்டது.

தாய்லாந்து செஞ்சிலுவைச் சங்கம் சரக்கு வாகனங்கள் மூலம் மியன்மார் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அவற்றை அனுப்பி வைத்ததாகத் தாய்லாந்து வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

பத்து ஆசியான் நாடுகள் ஆதரவுடன் கூடிய மனிதநேய வழித்தடத்தை நிறுவுவதற்கான விரிவான அமைதித் திட்டத்தின் ஒரு பகுதியே இந்த உதவிப்பொருள் அனுப்பும் திட்டம்.

இதனிடையே, மியன்மாரில் நடந்துவரும் உள்நாட்டுச் சண்டை காரணமாக குறைந்தது 2.6 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் 18 மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு உதவி தேவைப்படுவதாகவும் ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மியன்மாரில் நடந்துவரும் சண்டைகளைக் கட்டுக்குள் கொண்டுவரவும் பேச்சுவார்த்தையை ஊக்குவிக்கவும் தன்னால் பங்காற்ற முடியும் என்று தாய்லாந்து நம்பிக்கை தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!