அதிக அளவில் போதைமிகு அபின் உற்பத்தி செய்யும் நாடாக மாறியுள்ள மியன்மார்

பேங்காக்: உலகில் அதிக அளவில் போதை மிகு அபினை உற்பத்தி செய்யும் நாடாக மியன்மார் மாறியுள்ளதாக ஐக்கியநாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் அந்த இடத்தில் ஆஃப்கானிஸ்தான் இருந்தது.

ஆஃப்கானிஸ்தானில் தலிபான் தலைமையிலான அரசாங்கம் போதைப்பொருள்களைத் தடை செய்துள்ளது. அதனால் ஆஃப்கானிஸ்தானில் போதைமிகு அபின் உற்பத்தி செய்யப்படும் அளவு 95% குறைந்துள்ளது.

மியன்மாரில் 2021ஆம் ஆண்டில் ஆட்சி கவிழ்ப்பு நடந்தது. இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் ஆட்டம் கண்டது. மக்கள் வாழ்வாதாரத்திற்காக போதைமிகு அபின் செடியை வளர்க்கத் தொடங்கினர்.

ஒரு கிலோ போதை மிகு அபின் செடி பூக்கள் 476 வெள்ளி வரை விலைபோவதாகக் கூறப்படுகிறது. அதனால் அச்செடிகளை வளர்க்கும் நிலப்பரப்பும் அதிகரித்து வருவதாக ஐக்கியநாட்டு நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

போதை மிகு அபின் செடிகள் ‌‌‌மியன்மாரின் ஷான், சின், கச்சின் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!