இந்தியா

சில்க்யாரா: இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை ஒன்று இடிந்து விழுந்ததில் கடந்த எட்டு நாள்களாக 41 தொழிலாளர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
புதுடெல்லி: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 105வது பிறந்தநாளான ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான சக்தி ஸ்தல்லில் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
புதுடெல்லி: உலகில் அரிசி ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் இந்தியா, அடுத்த ஆண்டுவரை வெளிநாடுகளுக்கு அரிசி விற்பதற்கான கட்டுப்பாடுகளை நீட்டிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெஹ்ராடூன்: உத்தராகண்ட் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் சிக்கிக் கொண்ட 41 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் கடந்த எட்டு நாள்களாக நடந்து வருகிறது. அந்தப் பணியை மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி மற்றும் அந்த மாநில முதல்வர் புஷ்கர் சிங்கர் தாமி ஆகியோர் பார்வையிட்டனர்.
புதுடெல்லி: இஸ்ரேலின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா இரண்டாம் கட்டமாக 32 டன் நிவாரணப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைத்தது.