மூட்டை தூக்கும் முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன்

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முன்னாள் அமைச்சர் கமலகண்ணன் மூட்டை தூக்கும் காட்சி இணையத்தில் பரவலானது.

கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது அவர் வேளாண்துறை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் அவர்.

தற்போது சட்டப்பேரவை உறுப்பினராக கூட இல்லாத நிலையில் விவசாய வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், தனது நிலத்தில் பயிரிட்ட பொருள்களை டிராக்டர் மூலம் தனது வீட்டிற்குக் கொண்டுவந்தார். அப்போது டிராக்டரில் இருந்த மூட்டைகளை அவரே தலையில் சுமந்து இறக்கு வைத்தார்.

இதனை அவருடைய ஆதரவாளர் ஒருவர் காணொளியாக பதிவு செய்தார். அந்த நபர் முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணனை நோக்கி,” நாங்கள் தங்களுக்கு வாக்களித்தோம். ஆனால், நீங்கள் இதுபோன்ற வேலைகளைச் செய்கிறீர்கள்,” எனக் கேட்டார். அதற்கு அவர், “இந்த வேலைகள் செய்தால்தான் சாப்பாட்டிற்கு அரிசி கிடைக்கும்,” எனத் தெரிவித்தார்.

சமூகதளங்களில் பகிரப்பட்ட இந்தக் காணொளி தற்போது பரவலாகி வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!