நாய்க்குப் புலி வேடமிட்டு மக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்

இளைஞர்கள் பலர், தாங்களும் சமூக ஊடகத் தளங்களில் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கில், கேளிக்கை என்ற பெயரில் பல விஷயங்களைச் செய்கின்றனர்.

தமிழகத்தில் அரியலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இன்று வரை சிறுத்தைகளைப் பிடிக்காமல் இருப்பதாலும் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் பகுதியில், நாய்க்குப் புலி வேடமிட்டு அதனை வீதியில் இளைஞர்கள் சிலர் உலாவவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதனைக் கண்ட அப்பகுதி மக்களும், அவ்வழியே சென்றவர்களும் ஊருக்குள் புலிதான் வந்துவிட்டது என்று பதறிப்போயினர். 

இந்தச் செய்தி அப்பகுதியில் காட்டுத்தீயைப் போல் பரவியது. அதனைத் தொடர்ந்து சில இளைஞர்கள் அருகே சென்று பார்த்தபோது, நாய்க்குப் புலி வேடமிட்டு இருப்பது தெரியவந்தது. பொதுமக்களை அச்சுறுத்தவே சில இளைஞர்கள் அத்தகைய செயல்களில் ஈடுபட்டதாகத் தெரியவந்தது. 

நாய்க்குப் புலி வேடமிட்டு வீதியில் உலாவவிட்ட இளைஞர்கள், அதைக் காணொளியாகப் பதிவு செய்து இணையத்தில் பரப்பி வருகின்றனர். இதன் தொடர்பில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் சிறுத்தைகள் நடமாட்டம் இருக்கும் நிலையில், நாய்க்குப் புலிவேடமிட்டு அதை வீதியில் உலாவிட்ட சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!