‘கரப்பான் பூச்சி பஃப்ஸ்’ பேக்கரிக்கு ரூ.10,000 அபராதம்

சிவகாசி: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் உள்ள பேக்கரி ஒன்றில் ‘பப்ஸ்’ வாங்கிய வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வழக்கமாக அவர், பப்ஸை அப்படியே வாயில் வைத்து கடித்துச் சாப்பிடுவது வழக்கம். ஆனால், அன்று அவர் அதை இரண்டாகப் பிய்த்திருக்கிறார்.

அவர் பிய்த்த பப்ஸின் ஒரு பாதியில் இருந்து கரப்பான் பூச்சியின் கால்கள் எட்டிப்பார்த்தன. பயந்துபோன அவர், அதை முழுமையாகப் பிரித்துப் பார்த்தார். உள்ளே அப்படியே ஒரு முழு கரப்பான் பூச்சி இருந்தது.

அதனால் கோபமடைந்த அந்த வாடிக்கையாளர் கடைக்காரரிடம் அதைக் காண்பித்து சத்தம் போட்டிருக்கிறார். அதையடுத்து கடைக்காரர் அவருக்கு புதிய பப்ஸ் ஒன்றைக் கொடுத்துச் சமாதானப்படுத்திவிட்டார்.

புது பப்ஸை சாப்பிட்டும் அவருக்கு மனம் ஆறவில்லை. இதுகுறித்து அந்த வாடிக்கையாளர் சிவகாசி மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தார். அதையடுத்து அங்கு வந்த மாநகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜாமுத்து, பேக்கிரியை ஆய்வுசெய்து, அதில் உள்ள குறைபாடுகளுக்கு குறிப்பாணை வழங்கி, ரூபாய் பத்தாயிரம் அபராதம் விதித்தாா்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!