தாமான் ஜூரோங் விபத்து: 12 வயது சிறுமி உயிரிழப்பு; ஓட்டுநர் கைது

தாமான் ஜூரோங்கில் வேன் ஒன்று மோதியதால் 12 வயது சிறுமி ஒருவர் உயிர் இழந்தார். இரண்டு பள்ளிகளுக்குச் சில நிமிடங்கள் தொலைவில் அந்த விபத்து நேர்ந்தது.

23 வயது ஆடவரான வேன் ஓட்டுநர், கவனக்குறைவாக ஓட்டி மரணத்தை விளைவித்ததற்காகக் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.

யுவான் சிங் ரோட்டில் நேர்ந்த அந்த விபத்து குறித்து தனக்கு பிற்பகல் 3.50 மணிவாக்கில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. அந்த மாணவியின் மரணம் சம்பவ இடத்திலேயே உறுதிசெய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஒருவர் இங் டெங் ஃபொங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். காயமடைந்தவர் மற்றொரு பாதசாரியா பயணியா என்பது தெரியவில்லை. இருப்பினும், மேல்விவரங்களுக்காக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் காவல்துறையைத் தொடர்புகொண்டுள்ளது.

ஜூரோங் உயர்நிலைப் பள்ளியும், யுவபாரதி அனைத்துலகப் பள்ளியும் சம்பவ இடத்திற்கு அருகில் அமைந்துள்ளன.

உயிரிழந்த சிறுமி அனைத்துலகப் பள்ளி ஒன்றில் பயின்றதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!