சோல்: தற்காப்பை வலுப்படுத்தும் நோக்கில் தென்கொரியாவும் சவூதி அரேபியாவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 4) கையெழுத்திட்டன.
இதன் மூலம் தென்கொரியா அதன் ஆயுத விற்பனையை சவூதிக்கு அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளும் ஆயுதங்கள் குறித்த ஆய்வு, வளர்ச்சி, தயாரிப்பு உள்ளிட்டவை மீது மேலும் கவனம் செலுத்தக்கூடும்.
இந்த ஒப்பந்தம் இரு நாட்டு தற்காப்பு அமைச்சர்கள் முன்னிலையில் கையெழுத்தானது. புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து மேல் விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
ஆயுத விற்பனையில் முக்கிய நாடாக விளங்க தென்கொரியா முயற்சி செய்து வருகிறது. ஆயுத விற்பனையில் பல நாடுகள் முன்னிலை வகிக்க போட்டிபோட்டு வருகின்றன.
2022ஆம் ஆண்டு மட்டும் தென்கொரியா 17 பில்லியன் டாலருக்கு ஆயுத விற்பனை செய்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் தென்கொரியா அதன் ஆயுத விற்பனையை பத்து மடங்கு உயர்த்தியுள்ளது.