தற்காப்பை வலுப்படுத்த தென்கொரியா, சவூதி அரேபியா புரிந்துணர்வு ஒப்பந்தம்

சோல்: தற்காப்பை வலுப்படுத்தும் நோக்கில் தென்கொரியாவும் சவூதி அரேபியாவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 4) கையெழுத்திட்டன.

இதன் மூலம் தென்கொரியா அதன் ஆயுத விற்பனையை சவூதிக்கு அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளும் ஆயுதங்கள் குறித்த ஆய்வு, வளர்ச்சி, தயாரிப்பு உள்ளிட்டவை மீது மேலும் கவனம் செலுத்தக்கூடும்.

இந்த ஒப்பந்தம் இரு நாட்டு தற்காப்பு அமைச்சர்கள் முன்னிலையில் கையெழுத்தானது. புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து மேல் விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

ஆயுத விற்பனையில் முக்கிய நாடாக விளங்க தென்கொரியா முயற்சி செய்து வருகிறது. ஆயுத விற்பனையில் பல நாடுகள் முன்னிலை வகிக்க போட்டிபோட்டு வருகின்றன.

2022ஆம் ஆண்டு மட்டும் தென்கொரியா 17 பில்லியன் டாலருக்கு ஆயுத விற்பனை செய்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் தென்கொரியா அதன் ஆயுத விற்பனையை பத்து மடங்கு உயர்த்தியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!