கரப்பான் பூச்சியால் வீட்டில் வெடிப்பு

தோக்கியோ: ஜப்பானில் குமாமோடோ நகரில் உள்ள ஒரு வீட்டில் வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

இதற்கு காரணம் ஒரு கரப்பான் பூச்சி.

டிசம்பர் 10ஆம் தேதி வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்ததாக மெனிச்சி ஷிம்புன் வெளியிட்ட தகவல் தெரிவித்தது.

வெடிப்பில் மாடத்தில் இருந்த சன்னல் கண்ணாடி உடைந்ததில் வீட்டின் உரிமையாளருக்கு சிறு சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் அது கூறியது.

ஒரு கரப்பான் பூச்சியைக் கொல்வதற்காக அளவுக்கு அதிகமாக பூச்சிக் கொல்லி மருந்தை வீட்டின் உரிமையாளர் தெளித்தபோது திடீரென வெடிப்பு ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது போன்ற வெடிப்புகள் ஏற்படுவதாக பல புகார்கள் வந்துள்ளதாக ஜப்பானின் தேசிய பயனீட்டாளர் விவகார நிலையம் கூறியது.

மின்சாரச் சாதனங்களுக்கு அருகே பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும்போது தீ மூள்வதாக அது நம்புகிறது.

மின்சாரச் சாதனங்களின் மீது பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளிப்பது ஆபத்தானது. சாதனங்களை சேதப்படுத்துவதோடு அதனால் மனிதர்களுக்கும் காயம் ஏற்படும் என்று பல ஜப்பானிய பூச்சி ஒழிப்பு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!