இறுதிச் சுற்றில் சாந்திக்கு இடமில்லை

புடாபெஸ்ட்: உலகத் திடல்தட வெற்றியாளர் போட்டியில் மகளிர் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறத் தவறினார் சிங்கப்பூர் வீராங்கனை சாந்தி பெரேரா.

ஹங்கேரித் தலைநகர் புடாபெஸ்ட்டில் நடந்துவரும் அப்போட்டியில், மூன்றாவது அரையிறுதிச் சுற்றில் இடம்பெற்ற சாந்தி ஆறாம் நிலையில் பந்தயத்தை முடித்தார்.

அவர் எடுத்துக்கொண்ட நேரம் 22.79 நொடிகள்.

மூன்றாவது அரையிறுதிச் சுற்றில், நடப்பு உலக வெற்றியாளரான ஜமைக்காவின் ஷெரிக்கா ஜாக்சன் 22.00 நொடிகளில் பந்தயத்தை முடித்து, முதலிடம் பிடித்தார்.

நடப்பு ஆசிய வெற்றியாளரான 26 வயது சாந்தி, 200 மீட்டர் தகுதிச் சுற்றில் 22.57 நொடிகளில் புதிய தேசிய சாதனையுடன் பந்தயத் தொலைவைக் கடந்து, அடுத்த ஆண்டு பாரிசில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

அடுத்ததாக வரும் செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8 வரை சீனாவின் ஹாங்ஜோ நகரில் நடக்கவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளவிருக்கும் சாந்தி, அங்கும் முத்திரை பதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!