சிங்கப்பூரின் மிகவும் நன்கு இணைக்கப்பட்ட வட்டார மையமாக தெம்பனிஸ் விளங்குவதாக புதிய நூல் ஒன்றில் தெரியவந்துள்ளது.
வட்டார நிலையங்கள் என்பவை வேலை அல்லது பொழுதுபோக்கிற்காக மக்கள் வீட்டிலிருந்து பயணம் செய்யும் தூரத்தைக் குறைப்பதாகும்.
‘நகரம் மறுஉருவாக்கம்: சிங்கப்பூரில் கட்டமைப்புகள், இணைப்பு மற்றும் இடம் அடையாளங்கள்’ எனும் அந்நூல், சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்பு பல்கலைக்கழக கௌரவப் பேராசிரியர் சான் ஹெங் சீ மற்றும் பேராசிரியர் ஆய்வாளர் ஹார்வி நியோவால் திருத்தப்பட்டது.
2019, 2020, 2021 ஆண்டுகளில் செப்டம்பர் மாதம் 837 கைப்பேசிகளின் தரவுகளைப் பகுப்பாய்வு செய்த டாக்டர் நியோவும் எஸ்யுடிடி துணை ஆய்வாளர் லி பேயியும், தெம்பனிஸ் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளிலிருந்து செல்லுமிடங்களுக்கு மிகக் குறுகிய தூரம் பயணம் செய்ததைக் கண்டறிந்தனர்.
அதே நேரத்தில், தெம்பனிஸ் மற்றும் ஜூரோங்கில் வசிப்பவர்களுடன் ஒப்பிடுகையில், உட்லண்ட்ஸ் குடியிருப்பாளர்கள் சராசரியாக தொலைதூரப் பயணம் மேற்கொண்டது கண்டறியப்பட்டது.
2020ல் கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் சமூக இடைவெளி நடவடிக்கைகள் கடுமையாக இருந்தபோது தெம்பனிஸ் குடியிருப்பாளர்கள் பயணம் செய்த சராசரி தூரம், மூன்று வட்டார மையங்களிலேயே மிகவும் குறைவு.
அதே நேரத்தில் ஜூரோங் குடியிருப்பாளர்களுக்குப் பயண தூரம் சற்றுதான் குறைந்தது என்று டாக்டர் நியோ மற்றும் திரு லியின் பகுப்பாய்வு கண்டறிந்தது.