கிராஞ்சியில் தீச்சம்பவம்: தீயை அணைக்க மூன்று மணி நேரம் போராடிய தீயணைப்புப் படையினர்

கிராஞ்சி வட்டாரத்தில் உள்ள மறுசூழற்சி, கழிவு நிர்வாக நிறுவனத்துக்குச் சொந்தமான கட்டடத்தில் மார்ச் 28ஆம் தேதி அதிகாலை தீ மூண்டது.

அதிகாலை 2.25 மணி அளவில் தீச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

அதையடுத்து, 11 கிராஞ்சி கிரசெண்ட்டிற்கு 10 அவசரகால வாகனங்களுடன் ஏறத்தாழ 50 தீயணைப்புப் படையினர் அனுப்பிவைக்கப்பட்டனர்.

சம்பவ இடத்தை அதிகாரிகள் அடைந்தபோது வா அண்ட் ஹுவா நிறுவனத்துக்குச் சொந்தமான கட்டடம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது.

குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் சம்பவ இடத்தை அடைவதற்கு முன்பு அந்தக் கட்டடத்திலிருந்து 25 பேர் பத்திரமாக வெளியேறிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

தீச்சம்பவம் காரணமாக யாரும் காயமடையவில்லை என்று நம்பப்படுகிறது

தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் போராடினர்.

நண்பகல் நிலவரப்படி, பாதிக்கப்பட்ட இடங்கள் மீண்டும் தீப்பிடித்துக்கொள்ளாதிருக்க தேவையான பணிகளை அவர்கள் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

தீச்சம்பவத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!