சிங்கப்பூர் உணவு அமைப்புக்குப் புதிய தலைமை நிர்வாகி நியமனம்

பொருளியல் வளர்ச்சிக் கழக நிர்வாகக் குழு உறுப்பினரான திரு டேமியன் சான் சீ வெங், மே 1ஆம் தேதி சிங்கப்பூர் உணவு அமைப்பின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்பார்.

தற்போதைய தலைமை நிர்வாகி திரு லிம் கொக் தாய், 51, பொதுச் சேவைத் துறையிலிருந்து ஓய்வுபெறுவார்.

திரு சான், 51, ஹியுமன் கேபிட்டல் குழுமத்தின் நிர்வாகத் துணைத் தலைவராகவும் உள்ளார்.

பொருளியல் வளர்ச்சிக் கழகத்தில் அவர் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். தொழில்துறை மேம்பாடு, கொள்கை, திட்டமிடுதல் ஆகியவற்றை அவர் மேற்பார்வையிட்டார்.

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு திங்கட்கிழமை (மார்ச் 25) வெளியிட்ட அறிக்கையில், “கடந்த சில ஆண்டுகளாக சிங்கப்பூரின் வேளாண், உணவுத் துறையின் வளர்ச்சியில் திரு சான் வகித்த தலைமைத்துவத்தின் பொருட்டு, ஏற்புடைய அனுபவத்துடன் அவர் சிங்கப்பூர் உணவு அமைப்புக்கு வருகிறார்,” என்றது.

பொதுச் சேவைத் துறையிலிருந்து திரு லிம் ஓய்வுபெறுவது குறித்து பேசிய அமைச்சு, உணவு அமைப்பில் அவரது தலைமைத்துவத்திற்கும் பங்களிப்புகளுக்கும் தனது நன்றியை அவருக்கு தெரிவித்துக்கொண்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!