ஜெட்ஸ்டார் ஏஷியா நிறுவனத்தின் தலைமை நிர்வாகப் பொறுப்பில் 12 ஆண்டுகளாக இருந்த திரு பரதன் பசுபதி மார்ச் 1ஆம் தேதி பதவி விலகுகிறார்.
அவருக்குப் பதிலாக அந்தப் பொறுப்பை குவாண்டாஸ் நிறுவனத்தின் மூத்த நிர்வாகியான திரு ஜான் சிமியோனே ஏற்க உள்ளார்.
ஜெட்ஸ்டார் ஏஷியா நிறுவனத்தின் 51% பங்குகளை சிங்கப்பூர் நிறுவனமான வெஸ்ட்புரூக் இன்வெஸ்ட்மன்ட் நிறுவனம் வைத்துள்ளது. மீதி 49% பங்குகளை குவாண்டாஸ் நிறுவனம் வைத்துள்ளது.
திரு பரதன், வயது 55, வேறு வாய்ப்புகளைப் தேடிப் போக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்குப் பதிலாக பொறுப்பேற்க உள்ள திரு ஜான் சிமியோனே, 55, சிங்கப்பூரில் வசிப்பவர். இவர் தற்பொழுது குவாண்டாஸ் நிறுவனத்தின் ஆசியப் பிரிவுக்குத் துணைத் தலைவராக உள்ளார் என்று அறியப்படுகிறது.