மானபங்க விவகாரம்: சிறைத் தண்டனையிலிருந்து தப்பிய முன்னாள் என்யுஎஸ் விரிவுரையாளர்

மானபங்க வழக்கு ஒன்றில் முன்னாள் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக (என்யுஎஸ்) விரிவுரையாளரான ஜெரிமி ஃபெர்னாண்டோ சிறைத் தண்டனையிலிருந்து தப்பினார்.

பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படுபவருடன் இணக்கமான முறையில் தீர்வுகாண ஒப்புகொள்ளப்பட்ட பிறகு டாக்டர் ஃபெர்னாண்டோவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது. அந்த ஒப்பந்தம் குறித்த தகவல்கள் நீதிமன்றத்தில் வெளியிடப்படவில்லை.

தெம்பூசு கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றிய டாக்டர் ஃபெர்னாண்டோ திங்கட்கிழமையன்று (29 ஜனவரி) குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார். அதனால் இதே குற்றச்சாட்டுகளை இனி அவர் மீது சுமத்த முடியாது.

ஒரு பெண்ணை மானபங்கப்படுத்தியதாக 44 வயது டாக்டர் ஃபெர்னாண்டோ மீது குற்றம் சுமத்தப்பட்டது. சட்டப்படி சில குற்றங்களுக்கு மட்டுமே இணக்கமான தீர்வை எட்ட முடியும்.

பொதுவாக பாதிக்கப்பட்டவருக்கு ஒரு தொகையை வழங்கியோ மன்னிப்புக் கேட்டுக்கொண்டோ வழக்குகளில் இணக்கமான தீர்வு எட்டப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!