15 நிமிடங்களில் மூன்று பெண்களை மானபங்கம் செய்ததாக ஆடவர்மீது சந்தேகம்

ஆர்ச்சட் ரோட்டில் மூன்று பெண்களை 15 நிமிடங்களில் மானபங்கம் செய்துவிட்டு நான்காவது பெண்ணை நெருங்கியதாக சந்தேகிக்கப்படும் ஆடவர்மீது நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை குற்றம் சுமத்தப்பட்டது.

மானபங்கம் செய்ததாக சந்தேகிக்கப்படும் 48 வயது ஆடவரின் பெயர் ஜோசப் மார்க் மெர்வின்.

அவர்மீது மானபங்கம் செய்ததாக மூன்று குற்றச்சாட்டுகளும் குற்றச் செயலில் ஈடுபடுவதற்காக மற்றொரு நபரை அணுகிய குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது.

இச்சம்பவம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆர்ச்சர்ட் ரோட்டில் இருக்கும் லக்கி பிளாசாவிலும் அதற்கு அருகேயும் நடந்ததாக கூறப்பட்டது.

வரும் பிப்ரவரி 14ஆம் தேதி ஜோசப் தன் குற்றத்தை ஒப்புகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு மானபங்கம் குற்றச்சாட்டுக்கும் குற்றவாளிக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது இத்தண்டனைகள் சேர்த்தும் விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!