சர்ச்சையில் சிக்கிய கீர்த்தி

தெலுங்கு, இந்தியிலும் கவனம் செலுத்தி வரும் கீர்த்தி சுரேஷ், இந்தி தெரியாது என ‘ரகு தாத்தா’ படத்தில் பேசி, தேவையில்லாத சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அப்படத்தின் முன்னோட்டக் காட்சியில் இடம்பெற்ற வசனங்களுக்கு ஒருசிலர் ஆதரவு தெரிவித்தாலும், பலரும் இந்திப் படத்தில் நடிக்க ஆசைப்படும்போது இந்தி எதிர்ப்பு வசனம் தேவையில்லாதது என கருத்து தெரிவித்துள்ளனர். அது குறித்து ‘மீம்’களையும் வெளியிட்டு வருகின்றனர்.

எதிர்ப்புகள் இருந்தாலும் ‘கேஜிஎஃப்’, ‘காந்தாரா’ உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் நேரடியாக தமிழில் முதன்முறையாக தயாரித்துள்ள இந்தப் படத்தின் முன்னோட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘தி ஃபேமிலி மேன்’ வெப் தொடருக்கு கதை எழுதிய சுமன் குமார், இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

சர்ச்சைகளைப் பற்றியெல்லாம் கண்டுகொள்ளாத கீர்த்தி சுரேஷ் இந்த ஆண்டு தனக்கு வெற்றிகரமான ஆண்டாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

‘தி ரூட்’ தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுடன் பொங்கல் கொண்டாடிய அவர், சமூக ஊடகங்களில் தொடர்ந்து வெவ்வேறு தோற்றங்களில் படங்களை வெளியிட்டு வருகிறார்.

பல மொழிகளிலும் பல படங்களில் பரபரப்பாக நடித்து வரும் கீர்த்தியின் நடிப்பில் இந்த ஆண்டு மட்டும் ஐந்து படங்கள் வெளியீட்டுக்குக் காத்திருக்கின்றன.

அண்மைக் காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ரகு தாத்தா. இது விரைவில் வெளியீடு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயம் ரவியுடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள ‘சைரன்’ பிப்ரவரி 9ஆம் தேதி பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதை தொடர்ந்து இப்படம் குறுகிய காலத்துக்குள் ஒடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து ரிவால்வர் ரீதா படம் வெளியீடு காணும் என கூறப்பட்டுள்ளது. சந்துரு இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார்.

கணேஷ் ராஜ் இயக்கும் கன்னிவெடி தமிழ், தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் உருவாகிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.

தெறி படம் இந்தியில் மறுபதிப்பு செய்யப்படுகிறது. அதில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் மூலம் அவர் பாலிவுட்டிலும் அறிமுகம் ஆகிறார்.

‘இது என்ன மாயம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து சிவகார்த்திகேயன், விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.

நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான ‘நடிகையர் திலகம்’ படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் சாவித்ரியாக வாழ்ந்து அனைவரையும் கவர்ந்தார் கீர்த்தி சுரேஷ். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான ‘மாமன்னன்’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. தெலுங்கில் வெளியான ‘தசரா’ படத்திலும் இவர் நடித்திருந்தார். மகேஷ்பாபுவுடன் நடித்த சர்க்கார் வரிபாடா படம் திரைக்கு வந்துள்ளது.

அண்மையில் நேர்காணல் ஒன்றில் தனது வாழக்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து பேசியுள்ளார்.

“என்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்லி அடிக்கடி ஒருத்தர் கிட்ட இருந்து லெட்டர் வந்துகிட்டே இருந்துச்சு. அந்த லெட்டர் பேர், அட்ரஸ்லாம் போட்டே வரும்.

“அவர் என்கிட்டே இருந்து பதில் எல்லாம் எதிர்பார்ப்பார். அதேபோல ஒருத்தர் வீடு தேடியே வந்தாரு. ஆனால் அவர் கொஞ்சம் வேற மாதிரி இருந்தாரு. அப்போ நான் வீட்டில் இல்லை. வீட்டில் வேலை செய்றவங்கதான் இருந்தார்கள்.

“இவர், அவங்ககிட்ட போய், ஏன் கீர்த்தி இந்த படம்லாம் பன்றா..? ஏன் அந்த படம்லாம் பன்றா..? அப்படின்னு கேட்டிக்காரு. ஏதோ நான் அவரு மனைவி மாதிரியே பேசிட்டு இருந்துருக்காரு,” என்று சிரித்தபடியே கூறினார்.

தனது சினிமா அனுபவங்கள் பற்றி பேசிய அவர், “என்னுடைய நடிப்பு எப்போதுமே எனக்கு திருப்தியை கொடுத்ததில்லை. நடிப்பின் மீது எனக்கு உள்ள ஈடுபாடு காரணமாக இன்னும் நன்றாக செய்ய வேண்டும் என ஒவ்வொரு படத்திற்கு முன்பும் நினைத்துக்கொள்வேன். நடிகையாக அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும். அதேபோல வணிக ரீதியாக அந்தப் படங்கள் வெற்றியடைய வேண்டும்,” என்றார் அவர்.

“வித்தியாசமான கதாபாத்திரங்கள் கிடைத்தால்தான் எனக்குள் உள்ள நடிகையை வெளியே கொண்டு வந்து ரசிகர்களுக்கு காட்ட முடியும். நான் நடித்த படங்களை பார்க்கவே மாட்டேன். அப்படிப் பார்த்தால் என் நடிப்பில் நிறைய தவறுகள் தெரியும். இன்னும் நன்றாக நடித்திருக்க வேண்டும் என தோன்றும்,” என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!