‘செங்கடல் நெருக்கடிநிலை இப்போதைக்கு முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை’

ஹேம்பர்க்: காஸா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களைக் கண்டித்து அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானின் ஆதரவைப் பெற்ற ஹூதிப் போராளிகள் செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்துகின்றனர்.

செங்கடலில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடிநிலை இப்போதைக்கு முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை என்று ஜெர்மனியின் ஹாபக்-லோய்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரோல்ஃப் ஹேபன் ஜென்சன் ஜனவரி 31ஆம் தேதியன்று ஹேம்பர்க் நகரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

செங்கடல் நெருக்கடிநிலை எப்போது முடிவுக்கு வரும் எனத் தெரியவில்லை என்று அவர் கூறினார்.

ஆனால் செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களைப் பாதுகாக்க அரசியல் ரீதியிலான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு, தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் நெருக்கடிநிலையை ஆறு மாதங்களுக்குள் முடிவுக்குக் கொண்டு வரும் சாத்தியம் இருப்பதாக திரு ஹேபன் தெரிவித்தார்.

ஹாபக்-லோய்ட் உலகிலேயே ஐந்தாவது ஆகப் பெரிய சரக்குக் கப்பல் நிறுவனம்.

செங்கடல் நெருக்கடிநிலை காரணமாக மற்ற நிறுவனங்களுக்குச் சொந்தமான சரக்குக் கப்பல்களைப் போலவே அதன் சரக்குக் கப்பல்களும் வேறு பயணப் பாதையைப் பயன்படுத்துகின்றன. சரக்குக் கப்பல்கள் சுவேஸ் கால்வாய் வழியாகச் செல்லாமல் ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பயண நேரம் கூடுவதுடன் செலவினமும் அதிகரித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!