பாலி குண்டுவெடிப்பு குற்றவாளிகள் மலேசியாவுக்கு அனுப்பப்படலாம்

குவான்டானாமோ பே: அல்-காய்தா இயக்கத்துடன் சேர்ந்து இந்தோனீசியாவின் பாலி தீவில் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட குற்றத்தை இரு மலேசியர்கள் ஒப்புக்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து இவர்களுக்கு 20லிருந்து 25 ஆண்டுகள் வரையிலான தண்டனை விதிக்கும்படி இவர்களுக்கு எதிரான வழக்கில் ராணுவ அதிகாரிகளைக் கொண்ட நீதித் துறை குழுவிடம் இவ்வாரம் கேட்டுக்கொள்ளப்படும்.

எனினும், திரைமறைவில் முன்னாள் அமெரிக்க அதிபரான டிரம்ப் அதிபராக இருந்த காலத்து அதிகாரியுடன் ஏற்பட்ட ரகசிய ஒப்பந்தத்தின்கீழ், இவ்விருவரும் இவ்வாண்டு இறுதிக்குள் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்படலாம் என்று கூறப்படுகிறது.

இவர்களுக்கு எதிரான தண்டனை விதிப்பு நடவடிக்கைகள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை மற்ற நாடுகளுடன் ஏற்படுத்திக்கொள்ளப்படும் ஒப்பந்தங்களின் வழி தீர்ப்பது என்பது அமெரிக்க அரசின் உத்தியாக இருக்கிறது என செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் 2003ஆம் ஆண்டு பிடிபட்டதிலிருந்து பல்லாண்டு காலம் அமெரிக்க மத்திய உளவுத் துறையின்கீழ் உள்ள ரகசிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் விவகாரத்தில் மலேசியாவுடன் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதால் இவர்களுக்கு எதிரான நீண்ட வழக்கு விசாரணையை அமெரிக்கா தவிர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!