பெட்டாலிங் ஜெயா: எல் நினோ வானிலை நிகழ்வின் விளைவினால் மலேசிய தீபகற்பத்தின் வடக்குப் பகுதியில் வறட்சி காலமும் வெப்பமான வானிலையும் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலை, நெற்பயிர் விவசாயிகளுக்குப் பெரும் கவலையைக் கொடுத்துள்ளது.
மலேசியாவின் கெடா மாநிலத்தின் சில பகுதிகளில் டிசம்பர் மாதத்தின் பிற்பகுதியிலிருந்து மழை பெய்யவில்லை என்று கூறப்படுகிறது.
சில மேட்டு நிலப் பகுதிகளில் உள்ள வயல்களும் பாதிக்கப்பட்டுள்ளன என்று விவசாயிகள் பகுதி அமைப்புகளின் பெண்டாங் செலாட்டன் தலைவர் அப்துல்லா முகமது கூறியுள்ளார்.
மேலும்,வறட்சி காலம் நெருங்கிக்கொண்டிருக்கும் காரணத்தினால் நஷ்டத்தைத் தவிர்க்கும் நோக்கில் பயிரிடுவதை நிறுத்திவிட்டதாக அவர் கூறினார்.
விவசாயிகள் வானிலையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகக் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், பூச்சி தாக்குதலால் வயல்கள் நாசம் அடைவது அவர்களுக்குச் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன.