கடலூர்: மழை நீரால் 250 ஏக்கர் பயிர்கள் சேதம்

புவனகிரி: கடலூர் மாவட்டத்தின் புவனகிரி அருகே கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்தது. இதில் சுமார் 250 ஏக்கர் சம்பா பயிர் மழை நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர்.

வடிகால் வாய்க்கால் முழுவதும் ஆகாயத் தாமரை பரவியிருப்பதால் தண்ணீர் செல்வதற்கு இடையூறாக உள்ளது.

“மழை காலத்துக்கு முன்னரே நீர்வளத்துறை அதிகாரிகள் இதனை அகற்றி இருக்க வேண்டும். கடன் வாங்கி விவசாயம் செய்யும் நிலையில் இது போல மூழ்கினால் என்ன செய்வது?” என்று இப்பகுதி விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

“அரசின் திட்டமிடாத நடவடிக்கையால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இது பற்றி இப்பகுதி நீர் வளத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “மழை காலத்தை கணக்கிட்டு, புவனகிரி பகுதியில் உள்ள அனைத்து வாய்க்கால்களிலும் ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டன. சில இடங்களில் ஆகாயத்தாமரை மீண்டும் முளைவிட்டன என்று தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!