மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் அனைத்துலக எல்லை கட்டுப்பாடு
கள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து சிட்னி விமான நிலையம் நேற்று வெளிநாட்டுப் பயணிகளை வரவேற்றது.
18 மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக, லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து சென்ற குவாண்டாஸ் விமானம், சிட்னி விமானநிலையத்தில் நேற்று காலை 6 மணிக்குத் தரையிறங்கியது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்ற வெளிநாட்டுப் பயணிகளும் நேற்று சிட்னி சென்றனர்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் தனிமைப்படுத்தல் இல்லாமல் ஆஸ்திரேலியாவிற்குப் பயணம் செய்யலாம் என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.
ஆனால் முதற்கட்டமாக ஆஸ்திரேலிய குடிமக்கள், நிரந்தரவாசிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விரைவில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், ஊழியர்களை அனுமதிப்பது குறித்தும் ஆஸ்திரேலியா திட்டமிட்டு வருகிறது.
சிங்கப்பூர் குடிமக்கள் வரும் 21ஆம் தேதி முதல் தனிமைப்படுத்தல் இன்றி ஆஸ்திரேலியா செல்லலாம்.