பினாங்கு பாலத்திலிருந்து குதித்த ஆடவர் கைது

ஜார்ஜ்டவுன்: பினாங்கின் பட்டர்வொர்த்தில் உள்ள ஜாலான் ராஜா உடாவில் டிசம்பர் 19ஆம் தேதி, 29 வயது நபர், ஒரு பெண்ணை கொன்றுவிட்டு பினாங்கு பாலத்திலிருந்து குதித்ததாகக் கூறப்பட்டது.

மீனவர்களால் காப்பாற்றப்பட்ட அந்த நபர், மாநில குற்றப் புலனாய்வுத் துறை காவலர்களால் கைது செய்யப்பட்டார் என்று வடக்கு செபராங் பேராய் மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையரான முகம்மது அஸ்ரி ஷாஃபி கூறினார்.

இந்த சம்பவம் குறித்து காலை 11.10 மணிக்கு பொதுமக்களிடமிருந்து காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. பாதிக்கப்பட்ட 42 வயதான பெண் செபராங் ஜெயா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, காலை 11.58 மணிக்கு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

மேலும், காவல்துறை தடயவியல் குழுவின் ஆரம்ப விசாரணையில், பெண்ணின் கழுத்து மற்றும் அவரது இடது தோள்பட்டையில் வெட்டுக்காயம் இருந்தது என்று முகம்மது அஸ்ரி தெரிவித்தார்.

சம்பவம் நடந்த இடத்தில் பல பார்வையாளர்கள் இருந்தார்கள் என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பிரேத பரிசோதனை செபரங் ஜெயா மருத்துவமனையில் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

இக்குற்றம், சட்டத்தின் பிரிவு 302இன் கீழ் கொலை என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!