1,000க்கும் மேற்பட்ட வேலைகள்; வெளிநாட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான குவைத், வேலைவாய்ப்பில் உள்ளூர்வாசிகளுக்கு முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், உள்ளூர்வாசிகளும் வெளிநாட்டவர்களும் விண்ணப்பிக்கும் வகையில், 1,090 புதிய வேலைவாய்ப்புகள் அடங்கிய வருடாந்தர வரவுசெலவுத் திட்ட அறிக்கையை அது வெளியிட்டுள்ளது.

கணக்காளர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட வேலைவாய்ப்புகளும் அவற்றில் அடங்கும். ஆனால், அவற்றுக்கும் வெளிநாட்டவர்கள் விண்ணப்பிக்கலாமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என ‘கல்ஃப் நியூஸ்’ செய்தி தெரிவிக்கிறது.

குறிப்பாக, நகராட்சி நிர்வாகம் சார்ந்த வேலைகள் அனைத்தும் குவைத் குடிமக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இவ்வாண்டு ஏப்ரல் முதல் புதிய வரவுசெலவுத் திட்டம் நடப்பிற்கு வரும். அதில் சம்பளம், படிகளுக்கு மட்டும் 190 மில்லியன் குவைத் தினார் (S$826 மில்லியன்) ஒதுக்கப்பட்டுள்ளது. இது, இப்போதைய வரவுசெலவுத் திட்டத்தைக் காட்டிலும் 9 மில்லியன் தினார் அதிகம்.

குவைத் அரசாங்கத் துறையில் கிட்டத்தட்ட 483,000 பேர் பணிபுரிகின்றனர். அவர்களில் கிட்டத்தட்ட 23 விழுக்காட்டினர் வெளிநாட்டவர்கள்.

அண்மைய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, 4.6 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட குவைத்தில் கிட்டத்தட்ட 3.2 மில்லியன் பேர் வெளிநாட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக, வெளிநாட்டு ஊழியர்களை அகற்றிவிட்டு, தனது குடிமக்களுக்காக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகளைக் குவைத் தீவிரப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!