இந்தியா

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 24) நடந்த திருமணத்தில் பங்கேற்று விருந்துண்ட பலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 70 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது உடல்நிலை சீராக உள்ளதாகக் கூறப்பட்டது. உணவு நச்சு காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.
பெங்களூரு/ஹைதராபாத்: இந்தியாவின் மசாலா ஏற்றுமதி ஒழுங்குமுறை ஆணையம் எம்டிஎச், எவரெஸ்ட் இரு நிறுவனங்களிடம் தரப் பரிசோதனை குறித்த விவரங்களை அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இம்பால்: மணிப்பூரின் காங்போக்பி மாவட்டம், தேசிய நெடுஞ்சாலை எண் 2ல் உள்ள பாலத்தில் ஏப்ரல் 24ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை 1 மணியளவில் கண்ணிவெடி வெடித்து சிதறியதில் பாலம் சேதமடைந்தது.
வயநாடு: பாஜக ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்களின் விலை பலமடங்காக உயர்ந்துள்ளது. ஆனால், பிரதமர் மோடி அதையெல்லாம் விட்டுவிட்டு தேர்தல் பிரசாரத்தின்போது உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்று தலைவர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
திருவனந்தபுரம்: பிரதமர் நரேந்திர மோடி கீழ்த்தரமான அரசியல்வாதி போல நடந்துகொள்வதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.