இந்தியா

இம்பால்: இந்தியாவின் மணிப்பூர் மாநிலம், இம்பால் நகரில் இருக்கும் விமான நிலையத்துக்கு அருகே அடையாளம் தெரியாத பறக்கும் தட்டு (யுஎஃப்ஓ) பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்தப் பறக்கும் தட்டைத் தேடும் பணியில் இந்திய விமானப் படை விமானங்கள் ஈடுபட்டுள்ளன.
ஜெய்ப்பூர்: இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம், தீட்வானா மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த ஓர் ஆடவருடன் பழக்கம் ஏற்பட்டது.
விசாகப்பட்டினம்: விசாகப்பட்டின மீன்பிடித் துறைமுகத்தில் இருந்த 45 படகுகள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தீயில் எரிந்து சேதமடைந்தன. இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களுக்கு இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்பவர்களுக்கு எதிராக மிரட்டல் விடுத்த பன்னுன் என்ற காலிஸ்தானிய தீவிரவாதிக்கு எதிராக தேசிய புலனாய்வு அமைப்பு வழக்குப் பதிவு செய்துள்ளது.
பெங்களூரு: பெங்களூரிலிருந்து சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் மொத்தம் 6 பயணிகளே இருந்த நிலையில், அந்தப் பயணத்தை ரத்து செய்தது இண்டிகோ விமானச் சேவை நிறுவனம்.