சிங்க‌ப்பூர்

முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம், 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற ஃபார்முலா 1 (எஃப்1) பந்தயம் குறித்து கணக்காய்வு நடத்தி வருகிறது.
காமன்வெல்த் வட்டாரத்தில் பிப்ரவரி 3ஆம் தேதியன்று நிகழ்ந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் ஏழு பேரைக் காயப்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 20 வயது ஆடவர்மீது திங்கட்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சுமத்தப்பட்டது.
முதிர்ச்சியடைந்த ஊழியர்கள் வேலையில் தொடர்வதையும் அவர்களின் பணிக்காலத்தை விரிவுபடுத்துவதையும் உறுதிசெய்ய, பயிற்சித் திட்டங்களே ஆகச் சிறந்த வழி என்று அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொவிட்-19 கிருமிப்பரவல் தொடர்பான தனிநபர் தொடர்பு தடமறிதல் தரவுகள் அனைத்தும் ‘டிரேஸ்டுகெதர்’, ‘சேஃப்என்ட்ரி’ மின்னிலக்கச் செயல்முறைகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
மீடியாகார்ப் தயாரிப்புக் குழுவைச் சேர்ந்த தன்னுரிமை பெண் ஊழியர் ஒருவரை மானபங்கம் செய்த 42 வயது பாடகரான சிவபாலன் சிவ பிரசாத் மேனனுக்கு $3,000 அபராதம் திங்கட்கிழமை விதிக்கப்பட்டது.