உல‌க‌ம்

ஜோகூர் பாரு: சிங்கப்பூருக்கும் ஜோகூர் பாருவுக்கும் இடையிலான விரைவு ரயில் பாதைக்கான (ஆர்டிஎஸ்) கட்டுமானப் பணிகள் இவ்வாண்டின் இரண்டாம், மூன்றாம் காலாண்டுகளில் முக்கியமான கட்டத்தை எட்ட இருப்பதால் ஜோகூர் பாரு நகர மையத்தில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க முடியாது என்று அந்நகர மேயர் முகம்மது நூரஸாம் ஒஸ்மான் தெரிவித்துள்ளார்.
பேங்காக்: சிறப்புத் தேவையுடைய சிறுவன் என்று கூறப்படும் எட்டாம் வகுப்பு மாணவன், கேலி வதை செய்தற்காக தனது வகுப்புத் தோழியைக் கத்தியால் குத்திக் கொன்றதாக காவல்துறையும் பள்ளி அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
கோலாலம்பூர்: முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் தொடர்பான வழக்கு பற்றிக் கலந்துரையாட ஜனவரி 29ஆம் தேதியன்று அந்நாட்டு மாமன்னர் தலைமையின்கீழ் மலேசிய அரச மன்னிப்பு வாரியம் கூடியதாக மலேசியப் பிரதமர் அலுவலக அமைச்சர் டாக்டர் ஸலிஹா முஸ்தஃபா தெரிவித்தார்.
இஸ்லாமாபாத்: அரசாங்க ரகசியத்தைக் கசியவிட்டதற்காக, முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பாகிஸ்தானிய நீதிமன்றம் பத்தாண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
கோலாலமபூர்: மலேசிய மாமன்னர் அப்துல்லா அகமது ஷாவுக்கும் அரசியார் அசிஸா அமினா மைமுனா இஸ்கந்தரியாவுக்கும் ஜனவரி 30ஆம் தேதி காலை தலைநகர் கோலாலம்பூரில் உள்ள நாடாளுமன்ற சதுக்கத்தில் பிரியாவிடை விழா நடத்தப்பட்டது.