கைப்பேசியில் ஐபிஎல் பார்த்தபடியே பேருந்தை இயக்கிய ஓட்டுநர்

கடலூர்: கைப்பேசியில் கிரிக்கெட் போட்டி நேரலையை பார்த்துக்கொண்டே பேருந்து ஓட்டிய ஓட்டுநரால் பயணிகள் பீதியடைந்தனர்.

திங்கட்கிழமை இரவு மும்பை, குஜராத் அணிகளுக்கு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இந்நிலையில், கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தின் ஓட்டுநர் தனது கைப்பேசியில் நேரடி ஒளிபரப்பை பார்த்தபடியே பேருந்தை இயக்கியதாகக் கூறப்பட்டது.

இதனால் கவனம் இழந்த அவர், இரண்டு முறை முன்னே சென்ற கார், அரசுப் பேருந்தின் மீது மோதுவதுபோல் சென்றுள்ளார். இதையடுத்து, பயணிகள் கூச்சலிட்டனர். மேலும் அந்த ஓட்டுநரிடம் கைப்பேசியை அணைத்துவிட்டு பேருந்தை இயக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அந்த ஓட்டுநர்மீது விருத்தாச்சலம் மோட்டார் வாகன ஆய்வாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!