தொட்டபெட்டா செல்ல சுற்றுப் பயணிகளுக்குத் தடை

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தின் தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்குச் செல்லும் சாலை சீரமைக்கப்பட உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு மூன்று நாள்கள் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து 2,637 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது தொட்டபெட்டா மலைச்சிகரம்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்துசெல்வது வழக்கம்.

இங்குள்ள தொலைநோக்கி மூலம் ஊட்டி நகரம், ஏரி, கேத்தி பள்ளத்தாக்கு, குன்னூர் நகரம், அவலாஞ்சி அணை போன்றவற்றைக் கண்டு ரசிக்கலாம்.

இந்த மலைச்சிகரத்திற்கு வார நாள்களில் அன்றாடம் 3,000 பேரும், வார இறுதி மற்றும் விடுமுறை நாள்களில் அன்றாடம் 7,000 பேர் வரையிலும் வந்துசெல்கின்றனர்.

இந்நிலையில், தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்குச் செல்லும் சாலையை வனத்துறை மூலம் சீரமைக்கவிருப்பதாகவும் அதை முன்னிட்டு, வரும் திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை என்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!