திருவள்ளுவர் சிலையைச் சுற்றுப்பயணிகள் கண்டுகளிக்க ஐந்து மாதங்களுக்குத் தடை

கன்­னி­யா­கு­மரி: கன்­னி­யா­கு­மரி மாவட்­டத்­தில் கடல் நடுவே காட்சி அளிக்கும் 133 அடி உயர திரு­வள்­ளு­வர் சிலை­யைப் பார்­வை­யிட ஐந்துமாத காலத்துக்கு சுற்­றுப் ­ப­ய­ணி­க­ளுக்­குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

கடலின் உப்­புக் காற்­றி­லி­ருந்து திரு­வள்­ளு­வர் சிலை­யைப் பாது­காக்­கும் வகை­யில், ரூ.1 கோடி செல­வில் அதன்மீது ரசா­ய­னக் கலவை பூசும் பணி­யி­னைத் தக­வல் தொழில்­நுட்­பத் துறை அமைச்­சர் மனோ தங்­க­ராஜ் நேற்று தொடங்கிவைத்­தார்.

மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சிலைமீது ரசா­ய­னக் கலவை பூசப்­பட்டு வருகிறது. இறு­தி­யாக கடந்த 2017ஆம் ஆண்டில் இது போல் ரசா­ய­னக் கலவை பூசப்­ பட்­டது.

இந்நிலையில், சிலிக்­கான் எனப்­படும் ரசா­ய­னக் கலவை பூசும் பணி தொடங்க உள்­ளது.

சிலை­யில் உள்ள வெடிப்­பு­களில் சுண்­ணாம்­புக் கலவை பூசப்­பட்டு, காகி­தக்­ கூழால் சிலை­யில் படிந்­துள்ள உப்­புக் கரை­சல் நீக்­கப்­படும்.

அதன்­பின்­னர் ஜெர்­மனி நாட்­டி­லி­ருந்து வர­வ­ழைக்­கப்­பட்ட சிலிக்­கான் எனப்­படும் ரசா­ய­னக் கலவை பூசப்­பட உள்­ளது.

இப்­போது தொடங்கி உள்ள இந்­தப் பணி­கள் வரும் நவம்­பர் மாதம் 2ஆம் தேதியன்று நிறை­வுறும் என்­றும் இதன் கார­ண­மாக ஐந்து மாதங்­க­ளுக்கு திருவள்­ளு­வர் சிலை­யைக் காண சுற்­றுலாப் பய­ணி­க­ளுக்கு அனு­மதி இல்லை என்றும் சுற்­றுலா வளர்ச்­சிக் கழ­கம் அறி­வித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!