மயாமி பொது விருது: போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்

மையாமி: மயாமி பொது விருது டென்னிஸ் போட்டியின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீரரான ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் உடன் இணைந்து களம் இறங்கினார். இந்த ஜோடி மொனாக்கோவின் ஹுகோ நிஸ் - போலந்தின் ஜியேலின்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டது.

இதில் முதல் நிலை ஜோடியான போபண்ணா- எப்டன் ஜோடி 7-5, 76 (3) என்ற ஆட்டக்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. இந்த வெற்றியைப் பெற போபண்ணா ஜோடிக்கு ஒரு மணி நேரம் 39 நிமிடங்கள் தேவைப்பட்டது.

போபண்ணா ஜோடி காலிறுதியில் ஜான் பாட்ரிக் (ஆஸ்திரேலியா)- செம் வீர்பீக் (நெதர்லாந்து) ஜோடியை எதிர்கொள்கிறது.

போபண்ணா ஜோடி இந்தப் போட்டியில் கடும் சவாலை எதிர்கொண்டது. முதல் செட்டில் 6-5 என முன்னிலையில் இருந்தபோது இரண்டு பிரேக் புள்ளிகளைக் காப்பாற்றியதன் மூலம் 7-5 என முதல் செட்டை கைப்பற்றியது.

2வது செட்டில் 6-6 என சமநிலை பெற்றதால் டை-பிரேக்கர் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் எதிர்ஜோடி டபுள் ஃபால்டுக்கு உட்பட்டதால் போபண்ணா ஜோடி முன்னிலை பெற்று 7-6(3) என்ற ஆட்டக்கணக்கில் கைப்பற்றியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!