பெங்களூர்: இந்தியாவில் நடந்து வரும் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
பெங்களூரில் சனிக்கிழமை பிற்பகலில் நியூசிலாந்து அணியை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது.
தொடர் தோல்விகளால் துவண்டு வந்த பாகிஸ்தான் அணி பங்ளாதேஷ் அணிக்கு எதிராக 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது தன்னம்பிக்கையுடன் உள்ளது.
முக்கியமாக அதன் பந்தடிப்பாளர்கள் சற்று முன்னேற்றம் கண்டுள்ளதால் பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு எதிராகவும் சிறப்பாக விளையாடக்கூடும்.
மறுமுனையில் தொடர்ந்து மூன்று தோல்விகளால் திணறி வருகிறது நியூசிலாந்து. இந்த ஆட்டத்தில் அணித் தலைவர் கேன் வில்லியம்சன் விளையாடுவாரா என்பது சந்தேகமாகத்தான் உள்ளது.
மேலும் அதன் முக்கிய வீரர்கள் சிலர் காயத்தால் அவதிப்படுவதால் நியூசிலாந்து அணி பலவீனமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த ஆட்டத்தில் வெற்றிபெறும் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு அதிகரிக்கும். அதனால் ஆட்டத்தில் அனல் பறக்கக்கூடும்.