கிரிக்கெட்: மூன்றாவது வெற்றியை நோக்கி நியூசிலாந்து

சென்னை: உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் 11வது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி பங்ளாதே‌ஷ் அணியுடன் மோதுகிறது.

ஆட்டம் சென்னை சேப்பாக்கம் விளையாட்டரங்கில் சிங்கப்பூர் நேரப்படி மாலை 4:30 மணிக்கு தொடங்கும்.

நியூசிலாந்து அணி தான் விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் சிறப்பாக விளையாடி வெற்றிகளை பெற்றது.

குறிப்பாக அவ்வணியின் பந்தடிப்பு பலமாக உள்ளதால் சென்னையில் நடக்கும் ஆட்டத்திலும் அதன் ஆதிக்கம் தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் சென்னை ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் நியூசிலாந்து பந்தடிப்பாளர்களுக்கு சற்று சவாலான ஆட்டமாக இது அமையலாம் என்று கிரிக்கெட் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

கால் காயத்திலிருந்து மீண்டுள்ள கேன் வில்லியம்சன் இந்த ஆட்டத்தில் விளையாடக்கூடும்.

அவர் மீண்டும் நியூசிலாந்து அணியை வழிநடத்துவார் என்பதால் அது அந்த அணிக்கு கூடுதல் பலத்தைச் சேர்க்கும்.

பங்ளாதே‌ஷ் அணி தான் விளையாடிய இரண்டு ஆட்டங்களில் ஒரு வெற்றியும் ஒரு தோல்வியும் பெற்றுள்ளது.

இரண்டாவது ஆட்டத்தில் பங்ளாதே‌ஷ் அணி இங்கிலாந்திடம் மோசமாகத் தோற்றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!