ஹாங்ஜோ: இவ்வாண்டு ஆசிய விளையாட்டுகளின் குத்துச்சண்டைப் பிரிவுகளில் போட்டியிட்ட ஒரே சிங்கப்பூரர் தோல்வியடைந்துள்ளார். சிங்கப்பூர் குத்துச்சண்டை வீராங்கனையான தனிஷா மதியழகன், பெண்கள் 50 கிலோகிராம் எடைப் பிரிவில் தோல்வியடைந்தார்.
ரவுண்ட் ஆஃப் 16 பிரிவில் 26 வயது தனிஷா, உஸ்பெக்கிஸ்தானின் சபினா பொபொகுலோவாவிடம் 5-0 எனும் புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தார்.
தனிஷா, 1976ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆசிய விளையாட்டுகளில் போட்டியிடத் தகுதிபெற்ற முதல் சிங்கப்பூர் குத்துச்சண்டை வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றவர்.