உள்ளூர் பயண சேவை நிறுவனமான ஏஜிஐ டெக்னோசிஸ் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பயண முகவர்கள் சட்டம் 1975இன் படி உரிமம் ரத்து செய்யப்பட்டதாக சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் ஏப்ரல் 23 அன்று தெரிவித்துள்ளது.
நிலுவையிலுள்ள தணிக்கை செய்யப்பட்ட கணக்கு அறிக்கை, வருடாந்திர வணிக செயல்பாடு லாப ஈவு , பயண முகவராக பணி செய்வதிலிருந்து விலகியது போன்றவற்றுக்காக ஏப்ரல் 22ஆம் தேதி ரத்து நடைமுறைக்கு வந்தது.
எனினும், ஏஜிஐ ஏற்கெனவே உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பணத்தைத் திருப்பித் தர வேண்டும் அல்லது உறுதியளிக்கப்பட்ட சேவைகளை உரிமம் பெற்ற வேறு பயண முகவரிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஆயர் ராஜாவில் அமைந்துள்ள அந்நிறுவனம், வாகன வாடகை, தங்குமிடம், விசா சேவை போன்ற உள்ளூர், வெளியூர் சேவைகளை வழங்குகிறது. இந்த நிறுவனத்தின் உரிமம் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 அன்று வழங்கப்பட்டது.
தவறிழைக்கும் பயண முகவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும் சிங்கப்பூரின் பயணத் துறையின் நற்பெயர் பாதுகாக்கப்பட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் தெரிவித்தது.
நிதி ஆண்டு முடிவடைந்த ஆறு மாதங்களுக்குள் கணக்காய்வு செய்யப்பட்ட அதன் கணக்கு அறிக்கையினை சமர்ப்பிக்கத் தவறியதைத் தொடர்ந்து 2023 செப்டம்பரில் எந்தவொரு பயண முகவர் நடவடிக்கையையும் மேற்கொள்ள அந்நிறுவனத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.